ஆப்நகரம்

சிக்கலில் பிரபல செல்போன் கடை; கேட்டை இழுத்து மூடும் நீதிமன்றம்?

தரமற்ற செல்போன் விற்பனை செய்த பிரபல செல்போன் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 19 May 2022, 4:32 pm
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிவச்சந்திரகுமார் என்பவர் ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்திருக்கும் பூர்விகா தனியார் மொபைல்ஸ் விற்பனை நிலையம் ஒன்றில் சாம்சங் Samsung மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
Samayam Tamil நுகர்வோர் குறைதீர் ஆணையம்
நுகர்வோர் குறைதீர் ஆணையம்


இந்த போனை வாங்கிய 3வது நாளில் இருந்து வேலை செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சிவச்சந்திரகுமார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடைக்கு பலமுறை நேரில் சென்று அணுகியும் போனில் உள்ள குறைபாட்டை சரி செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் நீக்கம்?; முதல்வரை சந்தித்ததால் எடப்பாடி கோபம்!

இந்நிலையில் சிவச்சந்திகுமார் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தரமற்ற மொபைல் போனை குறிப்பிட்ட கடை விற்பனை செய்ததை உறுதி செய்தது.

திமுக நிழல்...பேரறிவாளனுக்கு எதிர்ப்பு; காங்கிரஸ் செய்யும் பலே தில்லாலங்கடி!

இதையடுத்து போன் விற்பனை தொகையான ரூ.11500 மற்றும் புகார்தாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.20000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3000 கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி, 23 ஆயிரம் தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி