கண் என்பது நம்முடைய முகத்தில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதி. இதைச் சுற்றி வருகின்ற கருவளையத்தைப் போக்குவதற்கு ஆழ்ந்த தூக்கம் மிக அவசியம். அடுத்ததாக நாம் பயன்படுத்தும் அழகு சாதன பொருள்கள். ரசாயனங்கள் அதிகம் இல்லாத பொருள்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். முடிந்தவரையில் நேச்சுரலான பொருள்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
கருவளையம் உண்டாகக் காரணங்கள்
கண்ணுக்குக் கீழே கருவளையங்கள் உண்டாவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
- சரியான தூக்கமின்மை,
- சரும அழற்சி,
- அதிகப்படியான மெலனின் சுரப்பு,
- சருமம் தடித்து போதல்,
- இரும்புச்சத்து குறைபாடு,
- சூரிய ஒளியின் புறஊதாக்கதிர் தாக்கம்,
- கண்களை அடிக்கடி தேய்ப்பது,
- பரம்பரையாக வருவது,
- நீர்ச்சத்து குறைபாடு,
- தைராய்டு பிரச்சினைகள்,
- எக்ஸிமா போன்ற சரும நோய்கள்,
- ஹேங்ஓவர் மற்றும் புகைப்பழக்கம்,
- தீடீர் எடை இழப்பு,
போன்ற பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றிலும் கருவளையங்கள் உண்டாகலாம்.
கருவளையம் நீங்க டீ பேக்
கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையம், கண் இமைகளில் வீக்கம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகளை சரிசெய்வதற்கு டீ பேக் பயன்படுத்துவது மிகச்சிறந்த பலன்களைத் தரும்.
கண்ணுக்கு மேல் டீ பேக் வைத்திருப்பதால் கண் மற்றும் கண்ணைச் சுற்றிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, கண்ணின் கருவளையத்தை நீக்கச் செய்கிறது.
எப்படி பயன்படுத்துவது
டீ பேக்கை ஃபிரிட்ஜில் ஃப்ரீசரில் அரை மணி நேரம் வரை வைத்திருந்து, அதை ஜில்லென்று எடுத்து கண்ணுக்கு மேல் வைத்திருந்து 15 நிமிடங்கள் கழித்து எடுக்கலாம். தினமும் இரவு நேரங்களில் இதை செய்வது நல்லது.
கருவளையம் நீங்க வெள்ளரி, உருளைக்கிழங்கு ஜூஸ்
கருவளையம் மற்றும் சருமப் பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கக் கூடியது இந்த வெள்ளரி மற்றும் உருளைக்கிழங்கு ஜூஸ். இது கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு ஜூஸில் உள்ள ஆன்டி - ஆக்சிடண்ட், ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள், வைட்டமின்கள் ஆகியவை சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை (inflammation) சரிசெய்ய உதவுகின்றன.
எப்படி பயன்படுத்துவது
வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சிறிதளவு எடுத்து துருவி, சாறெடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் கலந்து சருமம் மற்றும் கண்ணுக்குக் கீழும் கண்ணைச் சுற்றிலும் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர் கழுவிக் கொள்ளலாம். வாரத்தில் 3 நாட்கள் இதை செய்வது நல்லது.
கருவளையம் நீங்க குளிர்ச்சியான பால்
பால் நம்முடைய சருமத்துக்கு இயற்கையான கிளன்சராக செயல்படுகிறது. அதோடு சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
பாலில் லாக்டிக் அமிலம் அதிக அளவில் உள்ளதால் கண்னுக்குக் கீழ் உள்ள வீக்கத்தை (puffy eyes) சரிசெய்து சருமத்தின் கருமையை நீக்கி நிறத்தை மேம்படுத்தவும் செய்கிறது. அதோடு பாலில் உள்ள பொட்டாசியம் சருமத்தை மாய்ஸ்ச்சராக வைத்துக் கொள்ளவும் மென்மையாக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் விதம்
பாலை ஒரு காட்டன் பந்தில் முக்கி, அதை கண் மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பிறகு அப்படியே விட்டுவிட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம்.
கருவளையம் நீங்க கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் சருமத்துக்கு மிகச் சிறந்த மாய்ஸ்ச்சரைஸராகச் செயல்படுகிறது. நன்கு மாய்ஸ்ச்சராக இருக்கும் சருமம் தளர்வடையாது. நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழை ஜெல் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்வதோடு வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து கண்ணுக்குக் கீழ் பகுதியில் கருவளையம் அதிகமுள்ள இடங்களில் அப்ளை செய்து 5-10 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இதை இரவு நேரத்தில் செய்வது இன்னும் சிறந்தது. கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும். கற்றாழை ஜெல்லை கழுவ வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே விட்டுவிடலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கருவளையம் நீங்க பாதாம் ஆயில் & லெமன் ஜூஸ்
கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையத்தைப் போக்குவதில் மிக விரைவாக தீர்வளிக்கும் ஒரு வீட்டு வைத்தியம் என்றால் இந்த வைத்தியத்தை சொல்லலாம். பாதாம் ஆயிலுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தும் போது மிக விரைவாக பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறில் அஸ்கார்பிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இது கண்ணை நீரேற்றத்துடன் வைத்திருப்பதால் கண்கள் மற்றும் கண்ணுக்கு கீழ் உண்டாகும் வீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவியாக இருக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
ஒரு ஸ்பூன் பாதாம் ஆயிலுடன் சில துளிகள் மட்டும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதை கண்ணைச் சுற்றிலும் அப்ளை செய்யுங்கள். 5 நிமிடங்கள் மட்டும் இதை வைத்திருந்தால் போதும்.
வெறும் எலுமிச்சை சாறை மட்டும் கண்ணைச் சுற்றி அப்ளை செய்யக் கூடாது. அதிலுள்ள அமிலத்தன்மை சில சமயங்களில் சரும எரிச்சல் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உண்டு.
கருவளையம் நீங்க ரோஸ்வாட்டர்
ரோஸ் வாட்டர் காலங்காலமாக சருமப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா வகையான சருமப் பிரச்சினைகளுக்கும் எல்லா வகையான சருமத்துக்கும் ரோஸ்வாட்டரை பயன்படுத்த முடியும்.
இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கச் செய்யும். இது சருமத்துக்கு மிகச்சிறந்த டோனராக செயல்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது
சிறிதளவு காட்டனை எடுத்து ரோஸ் வாட்டரில் நன்கு நனைத்து, அதை கண் அமைகளுககு மேலாக வைத்து விடுங்கள். 15-20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள்.
தொடர்ந்து தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் மிக விரைவாக கருவளையங்கள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்
கருவளையம் நீங்க தக்காளி
தக்காளியில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை இருக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கண்ணுக்குக் கீழே மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்குகிறது.
எப்படி பயன்படுத்துவது
ஒரு ஸ்பூன் தக்காளி சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்ணுக்குக் கீழேயும் கண்ணைச் சுற்றிலும் அப்ளை செய்யுங்கள்.
10-15 வரை அப்படியே வைத்திருந்து பின் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளுங்கள். இதோடு அவ்வப்போது தக்காளி ஜூஸில் லெமன் ஜூஸ் மற்றும் புதினா இலைகள் சேர்த்து குடிக்கவும் செய்யலாம். இதை செய்து வரும்போது ஒரு சில நாட்களிலேயே கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் குறைந்து கொண்டே வருவதை உங்களால் உணர முடியும்.