ஆப்நகரம்

skin care tips: நம்முடைய சருமம் இயற்கையாகவே பளபளப்புடன் ஆரோக்கியமாக இருக்க

ஆரோக்கியமான வாழ்கை முறை நமது சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பல இரசாயனம் கலந்த ஓப்பனை பொருட்களால் நமது சருமம் பெருமளவில் சேதமடைகிறது. அரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் நமது சருமத்தை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகும். நமது சரும அமைப்பை மேம்படுத்த உதவும் சில வீட்டு வைத்திய முறைகள் பற்றி அறிவோம்.

Samayam Tamil 10 Jun 2022, 6:37 pm
நமது சருமம் வெளிப்புறத்திலிருந்து மட்டுமல்லாது உட்புறத்திலிருந்தும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மாசுபாடு, சரும பராமரிப்பு பொருட்கள் போன்ற வெளிப்புற காரணிகளாலும், நமது உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து போன்ற உட்புற காரணிகளாலும் நமது சருமம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
Samayam Tamil how to improve your skin structure with natural remedies
skin care tips: நம்முடைய சருமம் இயற்கையாகவே பளபளப்புடன் ஆரோக்கியமாக இருக்க


ஆயுர்வேதத்தின் படி, நமது உடலில் உள்ள முக்கிய ஆற்றல்களின் சமநிலையை பொறுத்து நமது உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது என கூறப்படுகிறது. நமது சரும அமைப்பை மேம்படுத்த உதவும் சில வீட்டு வைத்திய முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

​சரும பளபளப்புக்கு தேன்

தேனில் கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. இது முகப்பருவினால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு நல்ல ஒரு நிவாரணியாக அமைகிறது.

மேலும் இதில் ஈரத்தன்மை அதிக அளவில் நிறைந்திருப்பதால், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி, சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

சிறிது சுத்தமான தேனை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இதைப் பயன்படுத்திய பிறகு உங்கள் சருமம் நிறமாகவும் மென்மையாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும்.

ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை ஃபேஸ் பேக் மாதிரி உங்களது முகத்தில் பயன்படுத்தலாம்.

முகம் மற்றும் கழுத்து பகுதியில் இந்த கலவையை பூசி சுமார் 20 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் மிதமான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இது முக ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகிறது.

​சரும பளபளப்புக்கு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை

எலுமிச்சை மற்றும் சர்க்கரை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் இது இயற்கையாகவே ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால் நமது சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

சில இயற்கை வகை தயாரிப்புகளில் இது மிகச்சிறந்த ஒன்று. சிறிதளவு எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பின்னர் உங்கள் முகத்தை மிதமான நீரில் கழுவிக் கொள்ளவும். சிறந்த பலனுக்கு வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்து வரவும்.

​சரும பளபளப்புக்கு கற்றாழை, மஞ்சள் மற்றும் கடலை மாவு

சரும பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பு என்று வரும்போது கற்றாழை ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. இது சரும பிரச்சினைகளுக்கு இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் இது நமது சருமத்தை ஊட்டமாகவும், ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற குணங்கள் உங்கள் சருமத்தில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, அதன் மூலம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் புத்துணர்வுடனும் வைக்க உதவுகிறது. கடலைமாவு சருமத்தை சுத்தமாகவும் பிரகாசமாகாவும் வைக்க உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கடலைமாவு, ஒரு தேக்கரண்டி மஞ்சள், 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உங்கள் சருமத்தில் தடவி குறைந்தது 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

​சரும பளபளப்புக்கு தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளதால் இது ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக நமது சருமத்தில் செயல்படுகிறது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து, மென்மையாக வைக்க உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய்யை உங்கள் முகத்தில் பூசி மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.

இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். பின்னர் காலை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். தினசரி இவ்வாறு செய்துவர உங்கள் சருமத்திற்கு பளபளப்பும், பொலிவும் எளிதில் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்