ஆப்நகரம்

முகத்துக்கு ஆவாரம்பூ கடலைமாவு யூஸ் பண்ணுங்க, பாலீஷ் போட்டமாதிரி பளபளன்னு இருக்கும்!


முகத்தை தொட்டா வழவழன்னு இருக்கணும். அப்பதான் மேக்- அப் போடாமலே முகம் அழகா இருக்கும் என்று சொல்பவர்களுக்கு இந்த குறிப்பு நிச்சயம் உதவும்.

Samayam Tamil 19 Oct 2020, 11:08 am
முகம் பளிச் என்று இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதற்காகத்தான் முகத்துக்கு சோப்பு, க்ரீம் வகைகள். ( இதிலும் க்ளென்சிங், டோனிங், மாய்சுரைசர்) சீரான இடைவெளியில் ஃபேஷியல் வகைக என பலவித பராமரிப்பு செய்கிறோம். போதாக்குறைக்கு அதை மேலும் அழகாக்க இன்னும் கூடுதல் மேக்- அப் சாதனங்கள் வேறு.
Samayam Tamil how to use avarampoo and besan flour to get glowing skin
முகத்துக்கு ஆவாரம்பூ கடலைமாவு யூஸ் பண்ணுங்க, பாலீஷ் போட்டமாதிரி பளபளன்னு இருக்கும்!



இவையெல்லாம் செய்தாலும் சமயங்களில் முகத்தில் ஜொலிப்பு என்னவோ குறையவே செய்கிறது. ஏதோ முகத்தில் மிஸ் ஆகிறதே என்பவர்கள் திருப்தியாகும் வகையில் முகத்தை அழுகுப்படுத்திகொள்ள ஆவாரம்பூவும், கடலை மாவும் நிச்சயம் உதவக்கூடும். எப்படி தயாரிப்பது, என்னவிதமான பலன் கிடைக்கும், எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

​கடலை மாவு

கடலை மாவு ஆதிகாலம் முதலே பெரியவர்கள் வீட்டில் தான் தயாரிப்பார்கள். அதிலும் இப்போது போன்று மிக்ஸியெல்லாம் கிடையாது. உரலில் இடித்து சலிப்பார்கள். அல்லது இயந்திரத்தில் உடைக்க செய்வார்கள். இப்போது கடைகளில் கடலை மாவு கிடைக்கிறது என்றாலும் எளிதாக வீட்டில் தயாரித்து கொள்ளலாம்.


முகம் ரோசாப்பூ மாதிரி அழகா மென்மையா ஜொலிக்கணும்னா ரோஜாவை இப்படி பயன்படுத்துங்க!


கடலை பருப்பு அரைகிலோ வாங்கி கல் இருந்தால் அதை சுத்தம் செய்து வெள்ளைத்துணியில் போட்டு துடைத்து எடுக்கவும். ஒரு நாள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். வெயில் இல்லாத காலங்களில் வாணலியில் இலேசாக வறுத்து எடுத்தால் அவை எளிதாக அரையக்கூடும். மிக்ஸியில் சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து எடுத்து சல்லடையில் சலித்து எடுத்து பதப்படுத்தி வைக்கலாம்.

குறிப்பு : வீட்டில் பஜ்ஜி மாவுக்கும் இப்படியே பயன்படுத்தலாம்.

​ஆவாரம் பூ

ஆவராம்பூ மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும். இதை மொத்தமாக பறித்து வந்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வைக்கவும் . பூ மொறுமொறுப்பாக ஆகும் வரை உலர்த்தி வைக்கவும். வெயிலில் உலர்த்துவதாக இருந்தால் மெல்லிய துணியில் ஆவாரம் பூ போட்டு அதன் மேல் இன்னொரு துணியை போர்த்த வேண்டும்.


அப்படி செய்தாலும் அவை சீக்கிரமே உலர்ந்துவிடும். பிறகு ஆவாரம் பூவை மிக்ஸியில் பொடித்து தூளாக்கிவிடவும். இதையும் ஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.

​என்ன செய்யலாம்

தினமும் இதை பயன்படுத்தலாம். எல்லா சருமத்தினருக்கும் ஏற்றது இது. ஒரு டீஸ்பூன் ஆவாரம் பூ பொடியுடன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து பால் சேர்த்து குழைத்து முகம் கழுத்து பகுதியில் நன்றாக தடவி கொள்ளவும். குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு இதை தடவி கொள்ளவும். பிறகு சோப்பு போடாமல் நன்றாக தேய்த்து குளிக்கவும்.


ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பொருளோடு கலந்து தேய்த்து குளிப்பதன் மூலம் எளிதாக சரும பிரச்சனைகளை கையாள முடியும்.


வறண்ட சருமத்தை கொண்டிருப்பவர்கள் இந்த பொடியுடன் தயிர் கலந்து தேய்க்கலாம்.


எண்ணெய்ப்பசை கொண்டிருப்பவர்கள் எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தலாம்.


முகப்பரு பிரச்சனை இருப்பவர்கள் இந்த பொடியுடன் கற்றாழை சேர்த்து பயன்படுத்தலாம்.


சன் டான் பிரச்சனை இருந்தால் அவர்கள் இந்த பொடியுடன் குங்குமப்பூ இழைகள்,சந்தனம் சேர்த்து பயன்படுத்தலாம்.


எதுவுமே இல்லை என்றாலும் பன்னீர் கலந்து பயன்படுத்தலாம்.

​நன்மைகள்

கடலைமாவு சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும். சருமத்தில் இருக்கும் இறந்த செல்லை நீக்கி பளிச் என்று வைக்க உதவும். சருமத்தை வழவழப்பாக வைத்திருக்கும். சரும சுருக்கங்கள் உருவாகாமல் தடுக்கும்.


கவர்ச்சியா, வழ வழன்னு உதடு இருக்கணும்னா இத மட்டும் செய்யுங்க!


வெயிலால் மாறும் சருமத்தின் நிறத்தை மீட்டெடுக்க உதவும். எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு நல்ல தீர்வாக இதன் பயன் இருக்கும். முகத்தை எப்போதும் சோர்வில்லாமல் வைத்திருக்கவும் இவை உதவும்.குறிப்பாக கருவளையம் இல்லாமல் பாதுகாக்கலாம்.


ஆவாரம் பூ முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க உதவக்கூடியது. சருமத்தை வறட்சியிலிருந்து காக்கும். சருமத்தை வழவழவென்று பட்டுபோல் வைத்திருக்க இவை உதவும். பிறகு என்ன பாலீஷ் போட்டது போன்று சருமம் ஜொலிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்