ஆப்நகரம்

tomato: தக்காளியை முகத்துக்கு தினமும் யூஸ் பண்ணலாமா? யாரெல்லாம் பண்ணலாம்...

சூரியனால் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க தக்காளியை பயன்படுத்தலாம். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சருமத்தில் வெயிலின் தாக்கத்தையும் குறைக்க உதவுகிறது. முகத்தின் அழகு மேம்பட வாரத்திற்கு 1 முறை தயிர், தேன், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

Authored byமணிமேகலை | Samayam Tamil 19 Aug 2022, 11:39 am
பளபளப்பான சருமம் வேண்டும் என்று நாம் அனைவருமே ஆசைப்படுவோம். பெரும்பாலானோர் விளம்பரங்கள் பார்த்து அதில் விற்கும் எல்லா வகை க்ரீம்களையும் அது நம்முயை சருமத்துக்கு ஏற்றதாக இருக்குமா என்று கூட தெரியாமல் வாங்கிப் பயன்படுத்துவார்கள். அடிப்படையில் இது மிகவும் தவறு. எப்போதும் நம்மை அழகாக, பொலிவானவராக காட்டும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மிக எளிமையான மற்றும் அடிப்படையான சருமப் பராமரிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.
Samayam Tamil how to use tomato on face for various skin problems
tomato: தக்காளியை முகத்துக்கு தினமும் யூஸ் பண்ணலாமா? யாரெல்லாம் பண்ணலாம்...


​தக்காளி

இந்திய சமையலில் மிக முக்கியமான இடம் தக்காளிக்கு உண்டு. இது உணவின் சுவையை கூட்ட மட்டுமல்ல சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. தக்காளியை நாம் பச்சையாகவே சாப்பிடலாம். இதில் வைட்டமின் A, C , பீட்டா கரோட்டின், சல்பர், குளோரின், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

செயற்கை பொருட்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு இயற்கைப் பொருட்களை கொண்டு சரும அழகை மெருகூட்டலாம். நாம் தக்காளியை கொண்டு சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என்பது பற்றி காணலாம்,

​முகப்பரு நீங்க தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி இருப்பதால் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தை முறையாக பராமரிக்காமல் இருந்தால் முகப்பரு உருவாகி நம்மை பாடாய்படுத்தும்.

தக்காளி துண்டை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தேய்த்து விட்டு 15 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதேபோல் சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவாமல் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், சிறிது எலுமிச்சை சாறு கலந்த கலவையை முகத்தில் 5 நிமிடங்கள் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும அழுக்குகள் நீக்கி பருக்கள் மறையும். வாரத்தில் 3 நாட்கள் இப்படி செய்யலாம்.

​ஆயில் ஸ்கின்னுக்கு தக்காளி

நம்மில் பலரும் எண்ணெய் சருமத்தோடு போராடுவதற்கு அடிக்கடி முகம் கழுவுவது, க்ரீம்கள் உபயோகிப்பது போன்ற செயல்களை செய்வோம். ஆனால் இதனை தக்காளி கொண்டு சரி செய்யலாம்.

தக்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளதால் அது சருமத்தில் எண்ணெய் பசையை உருவாவதை தடுக்கிறது. தக்காளியை வெட்டி அதில் ஒரு துண்டை எடுத்து சருமத்தில் வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

தேவைப்படுபவர்கள் தக்காளியின் மேல் சர்க்கரை தடவி கூட மசாஜ் செய்யலாம். இதனால் சரும பிரச்சனைகள் குறையும்.

egg hair mask: முட்டையின் வெள்ளை கருவை ஹேர்மாஸ்க் போடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன...


​சரும துளைகளை குறைக்கும் தக்காளி

பலருக்கும் சருமத் துளைகள் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இதை மறைப்பதற்கானவே கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்வார்கள். அதெல்லாம் தற்காலிகமான தீர்வே தவிர நிரந்தரமானது அல்ல.

தக்காளி இப்பிரச்சனையை எளிமையாக போக்கும். இதில் இயற்கையாகவே ஆஸ்ட்ரிஜென்ட் பண்புகள் அதிகமாக உள்ளது. வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்றாக கழுவிக் கொண்டு தக்காளி ஜூஸ், சிறிது எலுமிச்சை சாறு கலவையை காட்டன் துணி கொண்டு முகத்தில் படர விட வேண்டும்.

அவ்வாறு செய்வதால் சருமத்தில் ஏற்படும் மெல்லிய தடிப்புகள், பிளவுகளையும் சரியாகும். எலுமிச்சை சாறுக்கு பதிலாக பாதாம் எண்ணெய், ஆரஞ்சு சாறு ஆகியவற்றையும் நாம் பயன்படுத்தலாம். மேலும் தக்காளி சாற்றை சருமத்தில் ஊற விட்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் கரும்புள்ளிகள் குறையும்.

skin care: வெறும் ஐஸ்கட்டியை முகத்துக்கு போடாம இந்த ஆரஞ்சு, பப்பாளி ஐஸ்கட்டி யூஸ் பண்ணுங்க... முகம் சும்மா பளபளனு இருக்கும்..


​சருமத்தை ஒளிரச் செய்ய தக்காளி

தக்காளியில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு கலவையை எடுத்து சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இப்படி செய்வதால் தக்காளியில் உள்ள லைகோபீன் இறந்த செல்களை அகற்றி சூரியனின் புறஊதாக் கதிர்களால் ஏற்படும் வறட்சியை இயற்கையாகவே குறைத்து சருமத்தை ஜொலிக்க செய்யும்.

​வயதான அறிகுறியைக் குறைக்கும் தக்காளி

இளமையிலேயே சருமம் வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதற்கு மிக முக்கியக் காரணமே நாம் பயன்படுத்தும் தவறான சரும பராமரிப்பு பொருள்களும் தவறான சரும பராமரிப்பு முறையும் தான்.

சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள யாருக்குத் தான் விருப்பம் இருக்காது

இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இதை சரிசெய்ய தக்காளி மிகவும் உதவியாக இருக்கும்.

தக்காளியை பேஸ்ட் போன்று அரைத்துக் கொண்டு அதில் அவகேடோ பழத்தின் பேஸ்ட் சிறிதளவு சேர்த்து முகத்தை நன்றாக கழுவிவிட்டு அப்ளை செய்துக் கொள்ளுங்கள். பின் 20 நிமிடங்கள் கழித்து கழுவி வேண்டும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்தால் போதும். சருமம் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றத்தைப் பெறும்.

acne: பருவே வராம முகம் பளபளனு பளிங்கு மாதிரி இருக்க என்ன சாப்பிடணும்? என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது...


​வறண்ட சருமத்தை போக்க தக்காளி

தக்காளி சருமத்தை நீரேற்றமாகவும் வறட்சியின்றியும் வைத்திருக்கச் செய்யும். இந்த தக்காளி சாறை கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த திக்கான மோருடன் கலந்து ஃபேஸ்மாஸ்க் தயார் செய்து கொள்ளவும்.

இந்த தக்காளி சருமத்தின் நிறத்தை மென்மையாக்கி, சரும அடுக்குகளில் ஆழமாக ஊடுருவி சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கும். இதனால் சரும வறட்சி நீங்கி, புத்துணர்வாக இருக்கும்.

​இறந்த செல்களை நீக்கும் தக்காளி

சருமத்தில் அதிக எண்ணெய்ப் பசையோ அல்லது, வறட்சியோ உண்டாகிற போது சரும செல்கள் சேதமடைந்து, இறந்த செல்கள் முற்றிலும் சருமத்துக்குள்ளேயே தேங்கிவிடும். சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்சினையை ஏற்படுத்துவதோடு வயதான தோற்றத்தையும் கொடுக்கிறது. இதற்கு தக்காளி மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவற்றில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

skin care tips: என்னென்ன சருமபிரச்சினைகள் உள்ளவர்கள் ஃபேசியல் ஆயிலை தவிர்க்க வேண்டும்?


​சருமத்துக்கு தக்காளியால் ஏற்படும் பக்க விளைவுகள்

இயற்கையான பொருள்களாகவே இருந்தாலும் அளவுக்கு மீறி பயன்படுத்தினாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தினாலோ பெரிய அளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும் சருமம் வறட்சி அடைவது போன்ற சின்ன சின்ன பக்க விளைவுகள் உண்டாகும். அப்படித்தான் தக்காளியும்.

தக்காளியை முகத்தில் தடவும் போது எரிச்சல் ஏற்பட்டால் உடனே பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

அதேபோல் எரிச்சல், சருமம் சிவத்தல் போன்றவை ஏற்பட்டால் தக்காளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விட்டு தோல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ப செயல்படவும்.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்