ஆப்நகரம்

கடுகு எண்ணெயோட கடலைமாவு சேர்த்து முகத்துக்கு போடுங்க... தங்கம்மாதிரி ஜொலிப்பீங்க...

உங்க சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க ஒரே ஒரு பொருள் போதும். ஆமாங்க கடலை மாவு நம்முடைய சருமத்திற்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது. உங்க வறண்ட சருமத்தை எப்படி கடுகு எண்ணெய் மற்றும் கடலை மாவு கொண்டு ஸ்க்ரப் செய்யலாம்.

Samayam Tamil 29 Jul 2021, 5:47 pm
வறண்ட சருமம் இருப்பவர்கள் கடலை மாவு மற்றும் கடுகு எண்ணெய் கொண்ட ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி மென்மையான பட்டு போன்ற சருமத்தை கொடுக்கும். இந்த ஸ்க்ரப்பை எப்படி வீட்டில் இருந்த படியே தயாரிக்கலாம் என அறிவோம்.
Samayam Tamil mustard oil and besan body scrub to moisturise your dry skin
கடுகு எண்ணெயோட கடலைமாவு சேர்த்து முகத்துக்கு போடுங்க... தங்கம்மாதிரி ஜொலிப்பீங்க...


​கடலைமாவு

கடலை மாவில் புரோட்டீன், அன்சேச்சுரேட்டேடு கொழுப்பு அமிலங்கள், லினோலிக் மற்றும் ஒலியிக் அமிலம், ரிபோப்ளவின், நியசின், போலேட், பீட்டா கரோட்டீன் போன்ற ஏராளமான சத்துக்கள் இதில் இருக்கின்றன. கடலை மாவு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கி பருக்கள் போன்றவற்றை போக்க உதவுகிறது. கடலை மாவில் உள்ள ஜிங்க் சத்து அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.

​கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் முகத்தை சுத்தப்படுத்தவும் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் உதவுகிறது. சரும சுருக்கங்கள் மற்றும் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. கடுகு எண்ணெய்யில் விட்டமின் ஈ, தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும பிரச்சனைகளை விரட்ட உதவுகிறது.

எனவே

​கடுகு எண்ணெய் - கடலை மாவை எப்படி பயன்படுத்துவது :

கடுகு எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் காணப்படுகிறது. எஸ்கெரிச்சியா கோலி மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியிலிருந்து சருமத்தைத் காக்கிறது. இதன் மூலம் சரும கோடுகள் மற்றும் சரும சுருக்கங்களை போக்க முடியும். கடுகு எண்ணெயில் ‘அல்லில் ஐசோதியோசயனேட்’ என்ற ரசாயன கலவை உள்ளது.

​எப்படி வேலை செய்கிறது?

இது உடல் வலியை குறைக்க உதவுகிறது. கடுகு எண்ணெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமான "ஆல்பா லினோலெனிக் அமிலம்" வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

கடலை மாவு ஒரு நல்ல ஸ்க்ரப் பொருளாக செயல்படும். இது சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. கடலை மாவை பயன்படுத்தி வந்தால் பொலிவான மாசு மருவற்ற முகத்தை நீங்கள் பெற முடியும். சரும துளைகளில் உள்ள அடைப்பை போக்க உதவுகிறது. கொப்புளங்களை போக்கவும், சருமத்தை பொலிவாக வைக்கவும் உதவுகிறது.

​தேவையான பொருட்கள்

  • 4 டீ ஸ்பூன் கடலை மாவு
  • 1/2 டீ ஸ்பூன் மஞ்சள்
  • 1/2 லெமன் ஜூஸ்
  • 1 டீ ஸ்பூன் தயிர்
  • 2 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய்

​பயன்படுத்தும் முறை

கடுகு எண்ணெயை 2-3 நிமிடங்கள் வெதுவெதுப்பாக சூடுபடுத்த வேண்டும். அதனுடன் மஞ்சள் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது அதனுடன் லெமன் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். கொஞ்சம் யோகார்ட் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.

இப்பொழுது இந்த பேஸ்ட்டை உடம்பு முழுவதும் தடவி 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதை ஸ்க்ரப்பாக பயன்படுத்தி 15 நிமிடங்கள் காய விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

​குறிப்பு :

கடுகு எண்ணெய் எல்லா சருமத்திற்கும் ஏற்றது கிடையாது. எனவே இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தில் தடவி ஒத்துக் கொள்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பாடி ஸ்க்ரப்பை வாரத்திற்கு இரண்டு நாட்கள் என பயன்படுத்தி வந்தால் நல்ல இயற்கையான பொலிவை நீங்கள் பெற முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்