ஆபரணங்கள்
பிளாட்டினம்,வைரம், தங்கம், வெள்ளி என விலைமதிப்புமிக்க ஆபரணங்களை பயன் படுத்தி வந்தவர்கள் கூட ஆடைக்கேற்ற ஆபரணங்கள் வாங்குவதை விரும்புகிறார்கள். தினம் ஒரு ஆடை அதற்கேற்ற தினம் ஒரு ஜூவல்லரி செட் என்பது தான் பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்கின்றது.
ஃபேஷன் ஜூவல்லரி என்றழைக்கப்படும் இந்த நகைகளோடு கவரிங் நகைகளையும் அணிவது வழக்கம். இதில் பலரும் தங்க நகையோடு கவரிங் நகைகளை கலந்து அணி வதுமுண்டு.
தரமான நகைகளாக இருந்தாலும் கூட முறையாக பராமரிக்க தவறும் போது அவை கழு த்து, காது.கைமணிக்கட்டு, விரல்கள், மூக்கு பகுதியில் அரிப்பையும், சிவப்பையும், தடிப்பையும் என்று அதிக பிரச்சனையை உண்டாக்கிவிடுகிறது. சருமத்தில் ஆபரணங்க ளும் அரிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்பதை அறிந்து தவிர்த்தால் சருமபிரச்சனையை தவிர்க்கலாம்.
சருமத்தில் அலர்ஜி
எந்த வயதிலும் இந்த அலர்ஜி உண்டாககூடும். கெமிக்கல் நிறைந்த அழகு சாதனங்கள் அதிகம் பயன்படுத்துவது வ்வொரு முறை மாற்றி மாற்றி பயன்படுத்துவது, மேக் அப் செய்த முகத்தை கலைக்காமல் இரவில் அப்படியே வைத்திருப்பது, செண்ட், குங்குமம், கவரிங் நகைகள் அதிகம் பயன்படுத்துவது என்று பல காரணங்கள் சருமத்தில் அலர்ஜியை உண்டாக்குகிறது.
சருமத்தில் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு என்று சொல்லலாம். இவை அதிகரிக்கும் போது நம் கைகள் இயந்திரமாக அந்த இடத்தை சொறிய தொடங்குகீறது. இதனால் பொது இடங்களில் இந்த அவஸ்தைக்கு உள்ளாவது எரிச்சலை உண்டு பண்ணும்.
இந்த அரிப்பு ஆரம்பகட்டத்தில் பெரிய பாதிப்பை உண்டாக்காது. ஆனால் ஒரு முறை அரிப்பு உண்டாகும் போது கவனிக்காவிட்டால் அவை அதிகப்படியான அலர்ஜியை உண்டாக்கி அந்த இடத்தில் நீர் கொப்புளங்களை உருவாக்கி இறுதியில் கரப்பான் நோயை கூட உண்டாக்கிவிடும். பிறகு இந்த சிகிச்சையை மாதக்கணக்கில் எடுக்க வேண்டியதாகிவிடும். பிறகு அந்த இடத்தில் எப்போதும் அரிப்பும் அதைத் தொடர்ந்து சருமத்தில் அலர்ஜியும் வரக்கூடும்.
கவரிங் நகையால் பாதிப்பு எப்படி
எல்லோரும் கவரிங் நகையால் தான் பாதிப்பு உண்டாகும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தங்க நகையிலும் வெகு சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை அதிகமாக இருந்தால் அவர்களுக்கு சருமத்தில் அரிப்பை உண்டு செய்யும். சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது. இதனுடன் செம்பு, நிக்கல், துத்தநகம், கோபால்ட் போன்றவை கலக்கப்படு கிறது. இதில் நிக்கல், கோபால் ட் போன்றவை சருமத்துக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் அரிப்பை உண்டாக்கிவிடும்.
நிக்கல் அளவு அதிகமாக இருக்கும் நகைகள் எல்லாமே சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்கும். உடலில் இருந்து வெளியேறும் வியர்வையானது அந்த நகையில் படியும் போது உப்பு வடிவில் வெளிப்பட்டு அவை சருமத்தில் தடிப்பையும் அரிப்பையும் உண்டாக்கும்.
கழுத்து, காது, மூக்குத்தி அணிந்தால் மூக்கு குத்திய இடங்களிலும் அரிப்பு, தடிப்பு உண் டாக்கி அந்த இடத்தில் சீழ் வருமளவு கொண்டுவந்துவிடும். அதனால் தான் ஆரம்பத்தி லேயே உங்களுக்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருளாக இருந்தால் அதை தவிர்ப்பது அல்லது வராமல் தடுக்க செய்ய வேண்டியதை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்
எப்படி கண்டறிவது
கழுத்து, காது பகுதியில் ஆரம்பத்தில் தடிப்பு, சிவப்பு வந்தால் அவை எதனால் வந்திருக் கிறது என்பதை முதலில் கண்டறியுங்கள். அதற்கு முன்பு ஒரு வாரகால இடைவெளியில் நீங்கள் வெளியில் சென்றீர்களா? அப்போது என்ன விதமான நகைகளை அணிந்திருந் தீர்கள். தங்கமா, கவரிங் நகைகளா என்பதை நினைவுபடுத்துங்கள். இவை தவிர வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருள்களை தவிர்த்து புதிதாக ஏதாவது ட்ரை செய்தீர்களா,சோப்பு மாற்றி பயன்படுத்தியதை கூட நினைவு படுத்தி குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
இரண்டாவது முறையும் கழுத்து காது கைவிரல், கை மணிக்கட்டு பகுதியில் இத்தகைய அரிப்பு, அலர்ஜி ஏற்படும் போது முன்பு நீங்கள் பயன்படுத்திய பொருள் கவரிங் நகை யோ, தங்க நகையோ என்பதை கவனித்து எதனால் என்பதை உறுதி செய்து கொள்ளுங் கள்.
எப்படி தவிர்க்கலாம்
தங்க நகையாக இருந்தாலும் அதில் இருக்கும் நுணுக்கமான வடிவமைப்பில் படிந்திருக் கும் அழுக்குஅள் நாள்பட்டு நகையில் தங்கியிருக்கலாம். அதை தொடர்ந்து பயன்படுத் தும் போது அவை உங்கள் சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்கி அரிப்பை உண்டாக் கிவிட குடு. அதனால் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், பயன்படுத்தியதற்கு பின்பு சுத்தமாக அழுக்கில்லாமல் மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.
தலைக்கு குளிக்கும் போது காது, மூக்கில் இருக்கும் நகையில் அழுக்குகள் சென்று அடைக்க வாய்ப்புண்டு. அதனால் அதை கழற்றி சோப்பு நீரில் ஊறவைத்து சுத்தமான பிரஷ் கொண்டு கழுவி துடைத்து பயன்படுத்துங்கள். காதில் அணியும் தோடு, விரலில் மோதிரம், மூக்குத்தி, செயின் அனைத்தையும் சுத்தம் செய்து பயன்படுத்துவதை மறவாதீர்கள்.
கவரிங் நகையாக இருக்கும் பட்சத்தில் இயன்றவரை அதை தவிர்ப்பது நல்லது. ஆனால் அணிய வேண்டிய கட்டாயம் இருந்தால் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போது சுத்த மான நீரில் கழுவி மெல்லிய துணியில் துடைத்து பிறகு பயன்படுத்துங்கள். கவரிங் நகை யில் தண்ணீர் படக்கூடாது என்றால் மெல்லிய துணியை நீரில் நனைத்து இலேசாக ஈரம் இருக்கும் போது துடைத்து பயன்படுத்துங்கள்.
சருமத்தில் தடிப்பும் அரிப்பும் உண்டாக்குவதில் கவரிங் நகைக்கும் பங்குண்டு என்பதால் இதையும் பராமரிக்க தவறாதீர்கள்.