ஆப்நகரம்

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

Samayam Tamil 20 Sep 2016, 10:35 pm
19 வயதான பரஷே பியர்டு எனும் பெண் தனது காதலனுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சரமாரியாக காரை நோக்கி சுட்டதில் அந்த பெண்ணும் அவரது காதலனும் பலத்த காயம் அடைந்தனர். ஆறு மாத கர்ப்பிணியான அந்தப்பெண்ணின் கழுத்தில் குண்டு காயம் ஏற்பட்டதால் அப்பெண் உயரிழந்தார். அவரது காதலன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்து வந்தார். ஆனால் மருத்துவர்கள் அந்த பெண்ணின் ஆறு மாத குழந்தையை காப்பாற்றி அக்குழந்தைக்கு “மிராக்கிள்” (அதிசயம்) என்று பெயரிட்டுள்ளனர். பரஷேவின் குடும்பத்தினர் இறந்த பெண் மறுபடி குழந்தையாக பிறந்துள்ளதாக கூறுகின்றனர். துப்பாக்கி சூடு இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
Samayam Tamil after pregnant women dies doctors deliver girl baby
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!


English Summary : Doctors deliver a child from died pregnant women

அடுத்த செய்தி

டிரெண்டிங்