ஆப்நகரம்

டெல்லியில் அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பாதிப்பு

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா தாக்குதலை தடுக்க வேண்டிய கட்டாயம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

TNN 20 Jun 2017, 3:33 pm
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா தாக்குதலை தடுக்க வேண்டிய கட்டாயம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil dengue and chikungunya on a steady rise in delhi
டெல்லியில் அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பாதிப்பு


ஆண்டுதோறும், உலகம் முழுவதும் 10 கோடி பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளில், டெங்கு காய்ச்சலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, இருமடங்காக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, டெல்லியில் 16,000 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 60 பேர் மரணமடைந்தும் உள்ளனர். இதேபோன்று, சிக்குன்குனியா நோயால், 12,221 பேர் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனை தடுக்க சீரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், டெல்லி சுகாதாரத் துறை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியுள்ளதென்றும், சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

Health: Dengue And Chikungunya On A Steady Rise In Delhi.

அடுத்த செய்தி

டிரெண்டிங்