ஏரி, குளம், ஆறு என நீர் நிலைகளை நாம் வரிசைப்படுத்துகிறோர். இவற்றில் ஏரி என்ற பெயர் எப்படி உருவானது என்று தெரியுமா. அது நமது தமிழ் சொல்லுக்கே ஆணி வேர் போன்று உள்ளது.
முன்னோரு காலத்திலிருந்து இப்போது வரை வேளாண்மைக்கு ஒரு பெயர் உண்டு. அது தான் ஏர் தொழில். இன்னும் சிலர் விவசாயம் என்று சொல்வார்கள். ஆனால், விவசாயம் என்பது தமிழ்ச் சொல் இல்லை. வேளாண்மை அல்லது வெள்ளாமை என்பது தான் தமிழ்ச் சொல். இந்த தொழிலை செய்பவர்கள் தான் வெள்ளாளர்கள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர்.
இவற்றில் ஏர் தொழில் என்னும் தூய தமிழ்ச் சொல்லே, ஏரி என்ற பெயர் வரக் காரணமாயிற்று.
வேளாண்மை செய்ய உதவக்கூடிய முக்கியமான கருவிக்கு பெயர், ஏர் அல்லது கலப்பை. அதனால் தான் வேளாண்மையை ஏர் தொழில் என்று கூறினர்.
இதையடுத்து இந்த ஏர் தொழிலுக்கு பயன்படும் தண்ணீரைத் தேக்கி வைக்கு நிலையம் என்பதால், ஏரி எனப் பெயர் பெற்றது.
இப்போது வரை ஏரியைச் சார்ந்துள்ள ஊர்களின் பெயர்களிலும் ஏரி உள்ளது.
பல்லவனேரி, மாறனேரி, ஆறுமுகநேரி என்றெல்லாம் சொல்வதுண்டு. பல்லவ மன்னரால் வெட்டப்பட்டது தான் பல்லவனேரி. இதே போல், பாண்டிய மன்னன் வெட்டிய ஏரிக்கு பெயர் மாறனேரி. தமிழ்கடவுள் முருக பெருமானின் பெயரால் அமைந்தது தான் ஆறுமுகனேரி.
முன்னோரு காலத்திலிருந்து இப்போது வரை வேளாண்மைக்கு ஒரு பெயர் உண்டு. அது தான் ஏர் தொழில். இன்னும் சிலர் விவசாயம் என்று சொல்வார்கள். ஆனால், விவசாயம் என்பது தமிழ்ச் சொல் இல்லை. வேளாண்மை அல்லது வெள்ளாமை என்பது தான் தமிழ்ச் சொல். இந்த தொழிலை செய்பவர்கள் தான் வெள்ளாளர்கள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர்.
இவற்றில் ஏர் தொழில் என்னும் தூய தமிழ்ச் சொல்லே, ஏரி என்ற பெயர் வரக் காரணமாயிற்று.
வேளாண்மை செய்ய உதவக்கூடிய முக்கியமான கருவிக்கு பெயர், ஏர் அல்லது கலப்பை. அதனால் தான் வேளாண்மையை ஏர் தொழில் என்று கூறினர்.
இதையடுத்து இந்த ஏர் தொழிலுக்கு பயன்படும் தண்ணீரைத் தேக்கி வைக்கு நிலையம் என்பதால், ஏரி எனப் பெயர் பெற்றது.
இப்போது வரை ஏரியைச் சார்ந்துள்ள ஊர்களின் பெயர்களிலும் ஏரி உள்ளது.
பல்லவனேரி, மாறனேரி, ஆறுமுகநேரி என்றெல்லாம் சொல்வதுண்டு. பல்லவ மன்னரால் வெட்டப்பட்டது தான் பல்லவனேரி. இதே போல், பாண்டிய மன்னன் வெட்டிய ஏரிக்கு பெயர் மாறனேரி. தமிழ்கடவுள் முருக பெருமானின் பெயரால் அமைந்தது தான் ஆறுமுகனேரி.