ஆப்நகரம்

காலையில் எழுந்தவுடன் செய்யக் கூடியதும் செய்யக் கூடாததும்!

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு தினமும் காலையில் நாம் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் இவைகள் தான்;

TNN 11 Nov 2017, 11:12 pm
நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு தினமும் காலையில் நாம் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் இவைகள் தான்;
Samayam Tamil dos and donts these things in daily morning
காலையில் எழுந்தவுடன் செய்யக் கூடியதும் செய்யக் கூடாததும்!


செய்யக் கூடியது;

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு வெளியே நாம் குளித்து புத்துணர்ச்சியாக இருப்பது போல், உடலுக்குள்ளும் இப்படி தண்ணீர் குடிப்பதால் புத்துணர்ச்சி பெற முடியும்.

வெந்தயத்தை முதல் நாள் இரவில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குணமாகுகிறது. இதே போல் உடல் சூட்டையும் இவை தணிக்கிறது.

அல்சருக்கு அருமருந்து அருகம்புல் என்று சொல்வார்கள். எனவே வெந்நீருடன் அருகம்புல் சாறை பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது.

நமது உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பை இஞ்சி சாறு குணமாக்குகிறது. எனவே இஞ்சி சாறையும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு குடிக்கலாம். அதே போல், நெல்லிக்காய் சாறையும் குடிக்காலாம்.


செய்யக்கூடாதது;

முதல் விஷயம் காபி, டீ தான். நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் அதிகபடியான பங்கு காலையில் காபி டீ குடிப்பது தான். எனவே இவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

இதே போல், காலையில் எழுந்தவுடன் புகைபிடிப்பதும் மிக ஆபத்தான செயல் ஆகும்.

காலை உணவை தவிர்ப்பது அறவே கூடாத செயல். காலையில் நமது உடலின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது. இதற்காகத்தான் அனைத்து உயிர்களுக்கும் காலை உணவு அவசியமாகுகிறது.

வாய்ப்புண், வயிற்றுப்புண் இருப்பவர்கள் இஞ்சியை தவிர்ப்பது நல்லது.

காலையில், பயிர் வகைகள், பிரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. இவைகளில் புரோட்டின் நிரம்ப காணப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்