ஆப்நகரம்

நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்: 32 வருஷத்துக்கு பின் சொன்ன பிரபல மாடல் அழகி!

அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மாடல் அழகி பத்மாலட்சுமி தனது 16வது வயதில் கற்பழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Sep 2018, 4:25 pm
அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மாடல் அழகி பத்மாலட்சுமி. இவர் ஒரு எழுத்தாளரும் ஆவார். இந்நிலையில் தனது 16வது வயதில் கற்பழிக்கப்பட்டதாக பிரபல அமெரிக்க பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Capture


பத்மாலட்சுமி எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பிரபல அமெரிக்க பத்திரிக்கையில் தன்னைப்பற்றி இவர் எழுதியுள்ளார். அதில், ‘நான் 16வது வயதில் கற்பழிக்கப்பட்டேன். 23 வயது வாலிபருடன் ‘டேட்டிங்’ல் இருந்தேன். அப்போது கற்பழிக்கப்பட்டேன்.’ என எழுதியுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது களைப்பாகவும் இருந்ததால் தூங்கிவிட்டேன். அப்போது அந்த நபர் என்னை கற்பழித்து விட்டார். இது போன்ற சம்பவங்களால் பெண்ணின் வாழ்க்கை தான் சீரழிகிறது. இந்த துயர சம்பவத்தை அப்போது நான் வெளியில் சொல்லவில்லை.

அதிபர் டொனால்டு டிரம்பால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியான பிரட் கவான்னா மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் நானும் எனது துயர சம்பவத்தை எழுத தீர்மானித்தேன். ‘ என்றும் குறிபிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்