ஆப்நகரம்

சுகாதார திட்டங்களில் இந்தியா அக்கறை காட்டுவதில்லை: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

சுகாதார திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இந்தியா புறக்கணிப்பதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

TNN 14 Dec 2016, 8:57 am
சுகாதார திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இந்தியா புறக்கணிப்பதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
Samayam Tamil india fares poorly on health indicators who
சுகாதார திட்டங்களில் இந்தியா அக்கறை காட்டுவதில்லை: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை


2030ம் ஆண்டுக்குள் சுகாதாரத்தில் தன்னிறைவை எட்டும் வகையிலான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதாக, இந்தியா உள்பட 190 நாடுகள் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான நாடுகள் போதிய நிதி உதவி கிடைக்காமல் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் காட்டுகின்றன.

ஆனால், இந்தியாவில் மட்டும் போதிய நிதி உதவிகள் கிடைத்தும், அதனை சுகாதார திட்டங்களுக்காகச் செலவிடுவதில் அக்கறை காட்டாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக, தாய் சேய் ஆரோக்கியம், சிறுவர்கள் சுகாதாரம் போன்றவற்றில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டும் 3 கோடி பேருக்கு, பிரசவம் நடைபெறுகிறது. இவர்களில், 45.5% பேர் மட்டுமே முறையான மருத்துவ கண்காணிப்பு மற்றும் செவிலியர்கள் பராமரிப்புடன்கூடிய உதவிகளைப் பெறுகின்றனர். இதர 19.7% பேருக்கு, மருத்துவரே நேரடியாக பிரசவம் பார்க்கிறார். இதன்காரணமாக, ஆண்டுக்கு சராசரியாக, 44,000 தாய்மார்கள் பிரசவ நேரத்தில் உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அளவில் சுகாதார திட்டங்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை. அத்துடன் அரசு இயந்திரம் சார்பாகப் போதிய அக்கறையும், நிதி உதவியும் சுகாதாரம் தொடர்பாகக் கிடைக்கப் பெறுவதில்லை என்பதே, இதற்கு முக்கிய காரணம் என, உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

India is among the 194 countries that are aiming to attain Universal Health Coverage (UHC) by 2030 under the commitment to attain Sustainable Development Goals (SDGs).

அடுத்த செய்தி

டிரெண்டிங்