ஆப்நகரம்

மாதவிடாய் முடிந்த பெண்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும்!

மெனோபாஸ் அல்லது இறுதி மாதவிடாய் முடிந்தபின்னர், பெண்களுக்கு சுவாசக் கோளாறு, நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

TNN 4 Dec 2016, 6:17 pm
மெனோபாஸ் அல்லது இறுதி மாதவிடாய் முடிந்தபின்னர், பெண்களுக்கு சுவாசக் கோளாறு, நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil menopause linked to breathing problems fatigue
மாதவிடாய் முடிந்த பெண்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும்!


இதுதொடர்பாக, நார்வே நாட்டைச் சேர்ந்த பெர்கன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், 40 வயதுக்கும் மேல் அல்லது 50 வயதை நெருங்கும்போது, பெண்களுக்கு மாதவிடாய் முடிவடைவது வழக்கம். இதன்பின், உடல் தளர்ச்சியடையும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகளும், மன பாதிப்புகளும் அதிகம் உள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இறுதி மாதவிடாய் முடிவடைந்தபின், பெண்களின் நுரையீரல் செயல்பாடுகளில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இது பெண்களின் உடல் ரீதியான இயக்கத்தைப் பாதிக்கச் செய்வதாக உள்ளது.

அத்துடன் மன அழுத்தம் காரணமாக, பணிபுரியும் திறன், செயல்படும் தன்மை போன்றவற்றிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி, வீட்டு வேலை செய்யும் பெண்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதற்கு முறையான உடல் கண்காணிப்பு மற்றும் மன அழுத்தம் தொடர்பான சிகிச்சைகள் மட்டுமே தீர்வளிக்கும் என, ஆய்வு நடத்திய பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Menopausal women are likely to experience an accelerated decline in lung function, leading to increase in shortness of breath, reduced work capacity and fatigue, a study says.

அடுத்த செய்தி

டிரெண்டிங்