ஆப்நகரம்

இன்று பூச்செடி நட்டு வைக்கும் தினம்..

இன்று பூச்செடி நட்டு வைக்கும் தினம் கொண்டாடப்படுகிறது.

TNN 12 Mar 2017, 2:09 pm
இன்று பூச்செடி நட்டு வைக்கும் தினம் கொண்டாடப்படுகிறது. பூவும், செடியும் பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. இந்த உலகத்தில் கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான வகையில் பூச்செடிகள் உள்ளன. அதில் பலவகையான பூக்கள் பிடிக்கும். அவற்றை சிலவற்றை பெண்கள் விரும்பி தலையில் வைப்பதும் உண்டு.
Samayam Tamil today march 12 plant a flower day
இன்று பூச்செடி நட்டு வைக்கும் தினம்..


சில பூக்கள் மருந்தாகவும், வாசனை திரவியமாகவும், அலங்காரப் பொருளாகவும் பயன்படுகிறது. இவ்வளவு ஏன் திருமண வரபேற்பு நிகழ்ச்சிக்கும் பூச்செண்டை அன்பு பரிசாக வழங்குவதும் உண்டு. காதலின் சின்னமான ரோஜாப்பூவை அனைவரும் விரும்புவதும் உண்டு. சில பூக்கள் கடவுளின் சின்னமாகவும் இருக்கிறது. இப்படி பல்வேறு விதமான நன்மைகளைப் பெற்றுள்ள பூக்களை நாம் நட்டு வைத்து தினமும் பராமரித்து வருவது நல்லது.

Today March 12, Plant a Flower Day

அடுத்த செய்தி

டிரெண்டிங்