ஆப்நகரம்

லெஸ்பியன் உறவு: வீட்டுக்கு பயந்து ஓட்டம் பிடித்த இரு பெண்கள்

மதுரா அருகேயுள்ள மகாபன் தெசில் மாவட்டத்தில் லெஸ்பியன் உறவுக் கொண்டுள்ள இரு பெண்கள், உயிருக்கு பயந்து வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

PTI 20 Feb 2017, 4:02 pm
மதுரா: மதுரா அருகேயுள்ள மகாபன் தெசில் மாவட்டத்தில் லெஸ்பியன் உறவுக் கொண்டுள்ள இரு பெண்கள், உயிருக்கு பயந்து வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டனர்.
Samayam Tamil up 2 women enter live in relationship leave home fearing danger to life
லெஸ்பியன் உறவு: வீட்டுக்கு பயந்து ஓட்டம் பிடித்த இரு பெண்கள்


திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குப் பின் புகுந்த வீட்டைவிட்டு வெளியேறிய சோனியா(21), மற்றும் அவருடன் ஏற்கனவே தையல் பள்ளியில் பயின்ற ரீனா(20) ஆகியோர் லெஸ்பியன் உறவு வைத்துள்ளனர். இவர்களது உறவு குறித்து அவர்களது பெற்றோர்களிடம் பேசியபோது அவர்கள் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

எனினும், தொடர்ந்து பெற்றோர்களை சமாதானம் செய்து சோனியாவும், ரீனாவும் திருமணம் செய்துக் கொள்ள முயற்சி செய்த நிலையில், உயிருக்கு ஆபத்திருப்பதாகக் கருதி வீட்டை விட்டு வெளியேறி காவல் துறையின் உதவியை நாடியதாக சோனியா தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து முன்னதாக இரு பெண்களின் பெற்றோர்களையும் அழைத்து அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம் எனக் காவல்துறை அதிகாரி அணில் குமார் கூறியுள்ளார். இருபெண்களின் வீட்டாரும் அவர்களுடனான உறவை துண்டித்துவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இரண்டு பெண்கள் சேர்ந்து வாழ்வதில் எவ்வித சட்ட சிக்கலும் இல்லை என்றும் அவர் கூறினார். பெற்றோர்கள் உறவை துண்டித்துக் கொண்டதால், கண்காணாத இடத்திற்குச் சென்று தங்களது வாழ்க்கையை தொடங்கவிருப்பதாகக் கூறிய சோனியா எங்களது உயிருக்கு உறவினர்களால் ஆபத்து இருக்கிறது என்பதையும் காவல்நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.

Two women in Mahaban tehsil of the district have left their homes "fearing danger to their lives" after they decided to enter into a live-in relationship.

அடுத்த செய்தி

டிரெண்டிங்