ஆப்நகரம்

கட்டிய வீட்டை அலங்கரிப்பது சரியா?

அழகாக வீடு கட்டுவதை விட கட்டிய வீட்டை அழகாக அலங்கரிப்பது தான் மிகவும் முக்கியம்.

TNN 18 Mar 2017, 2:51 pm
அழகாக வீடு கட்டுவதை விட கட்டிய வீட்டை அழகாக அலங்கரிப்பது தான் மிகவும் முக்கியம். அப்போது தான் முழுமையான அழகு வீட்டிற்கு கிடைக்கும். வீட்டிற்கு அழகு சேர்க்க சில புகைப்படங்களை வீட்டில் மாட்டலாம். அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.
Samayam Tamil what are the photos decorate house
கட்டிய வீட்டை அலங்கரிப்பது சரியா?


யானையின் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது போன்ற புகைப்படத்தை கிழக்கு பக்கமாக வைக்க வேண்டும். யானை – அறிவு, பலம், சக்தி இவற்றைக் குறிக்கும்.

போர் வீரன், போர் விமானம் ஆகியவற்றை வைக்கலாம்.

ஒற்றைக் கொம்புடைய குதிரையின் படத்தை மாட்டலாம். இது பெருமையுடைய சின்னமாகும்.

ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக இரண்டு கொக்கு, இரண்டு பறவைகள் கொண்ட படங்களை வீட்டில் மாட்டலாம்.

செல்வத்தை மேம்படுத்தும் மான் படத்தை வீட்டில் மாட்டி வைக்கலாம்.

கை விசிறியை சுவரில் மாட்டலாம். கடவுளின் படங்களை வைக்கலாம்.

அலாரம் அடிக்கும் கடிகாரத்தை படுக்கை அறை மேஜையில் வைக்கலாம்.

தைரியத்தையும், வீரத்தையும் குறிக்கும் சிங்கம் படத்தை வைக்கலாம். அதுவும் குட்டியுடன் கூடிய தாய் சிங்கத்தின் படத்தை வைக்கலாம்.


சுவரில் மாட்டக்கூடாத படங்கள்:

ஆயுதங்கள் உள்ள படங்களை வீட்டில் மாட்டக்கூடாது.

போரை சித்தரிக்கும் சிற்பங்கள் அல்லது புகைப்படங்கள்.

பொம்மையில் பீரங்கியுள்ள புகைப்படங்கள்.

முக்கியமாக பெருக்கல் குறி போல் வாள்களை வைக்கக்கூடாது.

மான் தலையை கொம்புடன் இருப்பது போன்று வைக்கக்கூடாது.

மிருகங்கள் வாயில் உணவை கவ்விக்கொண்டிருக்கும்படி இருக்கும் படங்களை வைக்கக் கூடாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்