ஆப்நகரம்

தலையணைக்குக் கீழ் பூண்டு வைத்து தூங்கினால் என்னவாகும்?

தூக்கம் வராமல் அப்படி, இப்படி உருண்டு படுக்கையில் கஷ்டப்படுகிறீர்களா? இனி அந்தக் கவலை இல்லை. பூண்டு இருக்க கவலை எதற்கு.

TOI Contributor 2 Dec 2016, 1:37 pm
தூக்கம் வராமல் அப்படி, இப்படி உருண்டு படுக்கையில் கஷ்டப்படுகிறீர்களா? இனி அந்தக் கவலை இல்லை. பூண்டு இருக்க கவலை எதற்கு.
Samayam Tamil  sleep better with garlic under your pillow
தலையணைக்குக் கீழ் பூண்டு வைத்து தூங்கினால் என்னவாகும்?


நமது முன்னோர்கள் கொண்டு இருந்த வாழ்க்கை இன்று நமக்கு இல்லை. குடும்பத்திற்கு கணவன் மனைவி இருவரும் உழைக்கக் வேண்டிய நெருக்கடி, மறந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை, குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டிய கட்டாயம் என பல பிரச்சனைகளால் பெற்றோர்கள் நிம்மதியை இழந்து நிம்மதியாக அமரக் கூட நேரம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

நெருக்கடியால், அழுத்தத்தால் தூக்கத்தை இழக்கிறோம். குழந்தைகளும் பெற்றோர் தூங்கும் வரை தூங்குவதில்லை. ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் டிவிக்களை பார்த்துக் கொண்டு தூங்கச் செல்வதில்லை. இதனால் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பெற்றோரை இட்டுச் செல்கிறது.

நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும். உங்கள் வீட்டிலேயே மருந்து உள்ளது. தலையணைக்குக் கீழே பூண்டை வைத்து விடுங்கள். பூண்டின் லேசான உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கவித்து, தூக்கத்தை வர வைக்கும்.

பூண்டை தினமும் உணவிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளி தொல்லை, ரத்த அடைப்புகள், கல்லீரல் பாதுகாப்பு , நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன் பாதிப்பில் இருந்து நிவாரணம் என பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது.

வீட்டிலேயே தூக்கத்திற்கான மருந்தை வைத்துக் கொண்டு எதற்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும். நீங்களும் முயற்சித்து பாருங்கள். பயன் பெறுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்