ஆப்நகரம்

ஏன் வெயில் காலத்தில் நெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்... இது 5 தான் காரணம்...

கோடை காலத்தில் உண்ணும் உணவில் நெய் அதிக சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டு இருக்கும். அதற்கான விடையை இங்கு காண்போம்.

Samayam Tamil 26 Apr 2021, 2:47 pm
பால் பொருளான நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கோடை காலத்தில் உங்கள் உடலை குளிர்ச்சியாக்கவும் உதவுகிறது. நெய்யில் கொழுப்பு மற்றும் ப்யூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்திய கலாச்சாரத்தில் நெய்யின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், இந்தியர்கள் எல்லோரும் உண்ணும் உணவில் நெய்யினை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை விரும்பியே செய்கின்றனர். அது ரொட்டியாக இருந்தாலும் சரி, பருப்பாக இருந்தாலும் சரி நெய்யையே மக்கள் பயன்படுத்துகின்றனர். உணவினை எந்த அளவிற்கு நெய் சுவையாக மாற்றுகிறதோ அதே அளவிற்கு, எண்ணற்ற நன்மைகளும் நமக்கு தாரளமாக கிடைக்கின்றன.
Samayam Tamil add ghee to your summer meals for these 5 health reasons in tamil
ஏன் வெயில் காலத்தில் நெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்... இது 5 தான் காரணம்...


​ஆயுர்வேதத்தில்

ஆயுர்வேதத்தின் படி நெய் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் பொருளாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு காலகட்டத்திலும், அதாவது நெய்யை பனிக் காலத்தில் தான் பயன்படுத்த முடியும் என்றில்லாமல் அதனை எப்போதுமே உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் நெய் சேர்த்த உணவால் கோடை காலத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

​ஒமேகா 3

நெய்யில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இந்த ஊட்டச்சத்துகளால் உடலில் உள்ள அனைத்து திசுக்களும் சரியான வளர்ச்சியை பெற முடியும். மேலும், அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் நெய் சேர்த்த உணவுகள் ஊக்குவிக்கின்றன. அத்தோடு நில்லாமல் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் நெய் ஒரு சிறந்த பொருளாகும். சரி வாங்க நெய்யின் ஆரோக்கிய நன்மைகள் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

​ஆரோக்கியமான கொழுப்பு

உடலின் செல் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை. அந்த வகையில் நெய்யில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பாகும். அதிலுள்ள ஊட்டச்சத்துகள் முக்கிய ஹார்மோன் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.

​உடல் ஈரப்பத்தை சமநிலையில் வைக்க

நெய்யில் ஈரப்பதமூட்டும் பண்புகள் அடங்கி உள்ளன. அது உடலை நீர்சத்து நிறைந்ததாக வைத்திருக்கும். குறிப்பாக, கோடை காலங்களில் உங்கள் உடலானது அதிக அளவில் நீர் இழப்பை அடையும். அப்போது தினமும் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரி செய்யப்படும். மேலும், உங்களது சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் காணப்படும்.

​நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த தவறாமல் உட்கொள்ள வேண்டிய உணவு எதுவென்று கேட்டல் அது நெய் தான். நெய்யிலுள்ள ஊட்டச்சத்துகள் நோய் தொற்று மற்றும் நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றும். நெய்யில் காணப்படும் பியூட்ரிக் அமிலமானது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

​செரிமான அமைப்பை மேம்படுத்த

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடுவது நமது செரிமானத்தை மேம்படுத்தி பித்த தோஷத்தை கட்டுப்படுத்தும். ஆயுர்வேதத்தின் படி, உடலின் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவவும் நெய் அதிக அளவில் எடுத்துக் கொள்வதே சிறந்த முறையாக கருதப்படுகிறது.

​உடல் குளிர்ச்சிக்கு

நெய்யை உணவில் சேர்த்து எடுத்துக் கொள்வதன் மூலம் உடலும், மனதும் குளிர்ச்சியான நிலையை அடையும். நெய் சேர்த்த உணவு சுவையாகவும், உண்ணும் போது சுகமான மனநிலையையும் கொடுக்கும். எனவே கோடை காலத்தில் நெய் சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கும், மனதுக்கும் சிறந்ததாகும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்