ஆப்நகரம்

முகத்தில் எண்ணெய் பசையா?

நம் அழகை கெடுக்கும் முகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பூசணிக்காயை கொண்டே தீர்வு காண முடியும்.

TNN 18 Sep 2016, 3:11 pm
நம் அழகை கெடுக்கும் முகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பூசணிக்காயை கொண்டே தீர்வு காண முடியும்.
Samayam Tamil beauty tips for oily face
முகத்தில் எண்ணெய் பசையா?


முகம் கருப்பாக இருப்பவர்கள்,பூசணிக்காயுடன் சிறிது சர்க்கரை மற்றும் பால் கலந்து பூசி வர முகத்தின் கருமை நிறம் மங்கும்..தோல் பளபளப்பாகும்.

பூசணிக்காயை சிறு,சிறு துண்டுகளாக நறுக்கி அதனை கண்களை சுற்றி வைத்து வர கருவளையம் மறையும்.

பூசணிக்காயில் உள்ள சதையை எடுத்து கூழாக்கி,அதனை முட்டையின் வெள்ளைக்கரு,பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ள வேண்டும்.காலை அல்லது இரவு தூங்கச் செல்லும் முன், அந்த பேஸ்ட்டை 15 நிமிடம் முகத்தில் பூசி ஊறவைத்து,பின்னர் கழுவினால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.முகம் மினுமினுப்பாகும்.

பூசணிக்காயை நன்கு மசித்து,அதில் தேன்,ஆப்பிள் சீடர் வினிகர் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் காய வைக்க வேண்டும்.பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால்,முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை தீரும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்