ஆப்நகரம்

பெப்டிக் அல்சர் எவ்வளவு ஆபத்தானது? அதன் காரணங்கள், அறிகுறிகள் என்ன?

நம்முடைய குடல், வயிறு, இரைப்பைகளில் ஏற்படுகின்ற தீவிரமான புண் தான் அல்சர் என்பதைப் பலரும் உணர்வதில்லை. அதை நாம் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். அதன் தீவிர விளைவுகள் பற்றி நாம் அறிவதில்லை.

Samayam Tamil 31 Oct 2020, 7:57 pm
உணவுக் குழாய் மற்றும் குடல், வயிற்றின் உட்பகுதிக்குள் ஏற்படுகின்ற புண், இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும். இது பொதுவாக அமிலத் தன்மையுடையது. அமிலத் தன்மை அதிகரிக்க அதிகரிக்க அதன் விளைவுகளும் அதிகமாகும். புண் சீழ் பிடிக்கும் நிலைக்குக் கொண்டு போய் விட்டுவிடும்
Samayam Tamil causes symptoms of peptic ulcer and how to treat in tamil
பெப்டிக் அல்சர் எவ்வளவு ஆபத்தானது? அதன் காரணங்கள், அறிகுறிகள் என்ன?


​குடலில் புண் எப்படி உணடாகிறது?

நம்முடைய வயிற்றில் அமிலங்கள் சுரப்பது நமக்குத் தெரிந்தது தான். நாம் உண்ணும் உணவை முறையாக ஜீரணிப்பதற்காக ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பது வழக்கம்.

முறையாக உணவு எடுத்துக் கொள்ளாத போதும் கூட, வெறும் வயிறாக இருக்கிற பொழுதும் கூடு இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதினால் இரப்பை மற்றும் சிறுகுடல் பகுதிகளின் சுவர்ப் பகுதிகளில் உள்ள மியூக்கோஸா என்னும் படலம் சிதைந்து குடற்பகுதிகளில் புண் உண்டாகிறது.

​காரணங்களும் காரணிகளும்

மிகவும் காரமான உணவுகளைச் சாப்பிடுவது, வயிறு நிரம்பிய பின்னும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது, அதிகமாக மசாலாக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, அசைவ (கொழுப்பு நிறைந்த) உணவுகளை எடுத்துக் கொள்வது, அடிக்கடி வலி நிவாரணி போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்வது

​மருந்துகளாலும் ஏற்படும்

அல்சர் ஏற்படுவதற்கான காரணங்களாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. சரி. மாத்திரை மருந்துகளும் கூட வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும் அல்லது அதிகரிக்கும் என்றால், என்ன தான் செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. முதலில் அடிக்கடி வலி நிவாரணிகள் எடுப்பதை நிறுத்துங்கள். பின்பு கீழே சொல்லும் வழியைப் பின்பற்றுங்கள். அதோடு முறையாக ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அல்சர் இருக்கிற இடம் தெரியாமல் போகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்