ஆப்நகரம்

குழந்தையை தலைக்கு மேல் தூக்கி போட்டு பிடிக்காதீர்கள்

குழந்தைகளுக்கு வெளி ஆபத்துக்களை விட வீட்டினுள் ஏற்படும் ஆபத்துக்கள் தான் அதிகம்.

TNN 29 Jan 2017, 11:07 am
குழந்தைகளுக்கு வெளி ஆபத்துக்களை விட வீட்டினுள் ஏற்படும் ஆபத்துக்கள் தான் அதிகம். குறிப்பாக, மற்ற பொருட்களால் ஏற்படும் ஆபத்தை விட மனிதர்களால் ஏற்படும் அபாயம் இன்னும் அதிகம்.
Samayam Tamil dont lift your child above your head
குழந்தையை தலைக்கு மேல் தூக்கி போட்டு பிடிக்காதீர்கள்


அதில் ஒன்றாக, குழந்தையை நாம் தூக்கி போட்டு பிடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளோம். நாம் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் போது குழந்தை சிரிக்கும். அப்படி சிரிக்கும் என்பதற்காக தூக்கிப் போட்டுப் பிடிக்கக் கூடாது.

ஏனெனில், குழந்தைகளின் மூளை தன் முழு வளர்ச்சியை அடைந்திருக்காது. எனவே, குழந்தையை தூக்கிப் போட்டோ அல்லது தலைக்கு மேலே தூக்கினால், "தலைக் குலுக்க காயம்" (Shaking Head Injury) என்கிற உயிரைக் குடிக்கும் ஆபத்து ஏற்படும்.

இப்படித் தூக்கிப் போட்டுப் பிடிக்கும்போது குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படும். இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை. சிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின் தூங்கும். திரும்ப விழிக்காது. அவ்வளவுதான்..
Dont lift your child above your head

அடுத்த செய்தி

டிரெண்டிங்