ஆப்நகரம்

மாத்திரையுடன் ஜூஸ் அருந்தலாமா?

மாத்திரைகளை விழுங்க தண்ணீர்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜூஸ் உடன் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால் மாத்திரையின் வீரியத்தை குறைத்துவிடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

TOI Contributor 21 Jul 2016, 4:59 pm
மாத்திரைகளை விழுங்க தண்ணீர்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜூஸ் உடன் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால் மாத்திரையின் வீரியத்தை குறைத்துவிடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil dont take pills with juice stick to water
மாத்திரையுடன் ஜூஸ் அருந்தலாமா?


இந்திய மருத்துவக் கழக பொது செயலாளர் டாக்டர் கே.கே. அகர்வால் கூறுகையில், ''உயர் ரத்த அழுத்தம், உயர் அழுத்தம் போன்றவற்றுக்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் மாத்திரையுடன் ஜூஸ் எடுத்துக் கொள்ளக் கூடாது. தண்ணீருடன்தான் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற ஜூஸ்கள் மாத்திரையின் வீரியத்தை குறைத்து விடும். அதேசமயம், திராட்சை ஜூஸ் மாத்திரையின் வீரியத்தை அதிகரிக்கும். கனடாவில் உள்ள மேற்கு ஆன்டாரியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், திராட்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரித்துள்ளது. திராட்சை ஜூஸ் எடுத்துக் கொள்வதால் நமது சிறுகுடலில் இருக்கும் என்சைம் என்ற புரோட்டீனை உடலுக்குள் சேராமல் தடுத்துவிடும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்படவில்லை என்றாலும் மாத்திரையை தண்ணீருடன்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் எஸ்.கே. சரின் கூறுகிறார். மேலும், அவர் கூறுகையில், ''முதல் காரணம், ஜூசுடன் எடுத்துக் கொண்டால் ரத்தத்தின் பிஹெச்சை மாற்றிவிடும். இரண்டாவது, மாத்திரையின் மேல் உள்ள 'கோட்டிங்'கை உடைத்துவிடும். ஆதலால், தண்ணீருடன் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது'' என்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்