ஆப்நகரம்

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்

நெஞ்சு பாரம், தோள்பட்டை வலி, அதிக அளவு வியர்வை வெளியேறுதல், கீழ்த்தாடை முதல் தொப்புள் வரை ஏதாவது ஒரு சில இடங்களில் ஏற்படும் வலி (உதாரணம், தொண்டை வலி) ஆகியவை இதன் அறிகுறிகள். 15 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சுப் பகுதியில் வலி நீடித்தால் கட்டாயம் மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.

Samayam Tamil 15 Apr 2019, 1:54 pm
நெஞ்சு பாரம், தோள்பட்டை வலி, அதிக அளவு வியர்வை வெளியேறுதல், கீழ்த்தாடை முதல் தொப்புள் வரை ஏதாவது ஒரு சில இடங்களில் ஏற்படும் வலி (உதாரணம், தொண்டை வலி) ஆகியவை இதன் அறிகுறிகள். 15 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சுப் பகுதியில் வலி நீடித்தால் கட்டாயம் மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.
Samayam Tamil heart


மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு ஓரளவு சுயநினைவு இருக்கும். `நெஞ்சு வலிக்கிறது’ என சைகையிலோ, வார்த்தைகளிலோ சொல்ல முயல்வார்கள்.

முதலில் அவர்களைக் காற்றோட்டமான இடத்தில் அமரவைக்க வேண்டும்.

தண்ணீர், சோடா, பழச்சாறு போன்றவற்றைத் தர வேண்டாம். இதனால், புரையேறி திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படக்கூடும்.

ஆஸ்பிரின் 325 மி.கி மாத்திரை ஒன்றை உடனடியாகத் தர வேண்டும். இது ரத்தம் உறைதலைத் தடுக்கும். இதைக் கடித்து மென்று அல்லது சிறிதளவு தண்ணீரில் விழுங்கச் செய்யலாம்.

ஒருவேளை மாரடைப்பு ஏற்பட்டவர் சுயநினைவை இழந்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிட்டால் அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி அளிக்கலாம். இதயத்துடிப்பு மீண்டும் வந்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்