ஆப்நகரம்

ரோட்டா வைரஸ்: முதல்முறையாக இந்தியாவில் தடுப்பூசி அறிமுகம்

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் ரோட்டா வைரஸ்க்கான தடுப்பூசி, முதல்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TNN 26 Mar 2016, 4:18 pm
ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் ரோட்டா வைரஸ்க்கான தடுப்பூசி, முதல்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil first vaccine against rota virus launched in india
ரோட்டா வைரஸ்: முதல்முறையாக இந்தியாவில் தடுப்பூசி அறிமுகம்


சுத்தம்,சுகாதாரம் குறைந்த பகுதிகளில், ரோட்டா வைரஸ் எளிதாக பரவுகிறது. 5 வயதுக்கு உள்பட்ட எந்த குழந்தையும் ரோட்டா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். மாசுபட்ட உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்டவை மூலமாக, இந்த வைரஸ் குழந்தைகளுக்குப் பரவுகிறது.

ரோட்டா வைரஸ் பாதித்த குழந்தைகளுக்கு, கடும் வயிற்றுப்போக்கு ஏற்படும். தொடர்ந்து வாந்தி,காய்ச்சல் ஏற்பட்டு, குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். உடனடியாக, சிகிச்சை வழங்கத் தவறினால், பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழக்க நேரிடும்.

நாடு முழுவதும் 2 கோடியே 70 லட்சம் குழந்தைகள் ரோட்டா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களை காப்பாற்றும் விதமாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில், தற்போது ரோட்டா வைரஸ்க்கான தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, இந்தியாவில் முதல்முறையாக, இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது. முதல்கட்டமாக, ஒடிசா,ஹிமாச்சலப் பிரதேசம்,ஹரியானா,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரோட்டா வைரஸ் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், பின்னர் படிப்படியாக, இதர மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், சுகாதாரத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்