உடலுக்கு ஆற்றல்
ஒவ்வொரு மனிதனின் உடலுக்கும் அத்தியாவசிய தேவை என்பது நீருக்கு அடுத்தபடியாக ஆற்றல் என்று சொல்லலாம். இந்த ஆற்றல் சீராக சரியாக இருக்கும் வரை உடலின் இயக்கும் சீராக இருக்கும்.
பழங்களில் பல வகைகள் இருந்தாலும் அதை வகைப்படுத்தி வைத்த அனுபவசாலிகள் நம் முன் னோர்கள். எந்த பழங்கள் யாருக்கு உகந்தவை அவை உடல் உறுப்புகளில் என்ன மாதிரியான நன் மையை தரும் என்று முன்னரே கண்டறிந்து நாம் சாப்பிட வேண்டிய பழங்களை நமக்கு கற்று தந்தவர்களும் நம் முன்னோர்கள்.
உடலுக்கு வேண்டிய ஆற்றல் உணவின் மூலம் பெறுகிறோம். இதற்காக தேடி தேடி சத்துள்ள பொரு ள்களை சேகரித்து அவற்றை பக்குவமாக கூட்டாக்கி சமைத்து அன்றாடம் சாப்பிடுகிறோம். ஆனால் இப்படி பக்குவமாக சமைத்து பெற வேண்டிய உடல் ஆற்றலை இயற்கையாக தருகிறது பழங்கள். அதுவும் உடனடியாக.
பழங்கள்
பழங்கள் பல வகையாக இருந்தாலும் இன்று அதிகப்படியாக நாம் 20 முதல் 30 வகையான பழங் களை தான் எடுத்துகொள்கிறோம். உணவை காட்டிலும் பழங்களுக்கு முக்கியத்துவமும் முதன் மைத்துவமும் கொடுக்கும் போது ஆரோக்கியமும் சாத்தியமாகிறது.
ஆனால் காலப்போக்கில் பழங்கள் அன்றாடம் எடுத்துகொள்வது தவிர்க்கப்பட்டு உடல் ஆரோக்கி யம் குன்றிய நாட்களிலும், விழாக்காலங்களிலும் மட்டும் எடுத்துகொள்கிறோம். தற்போது மக்க ளிடையே பழங்கள் உடலுக்கு நன்மை தரும் என்ற விழிப்புணர்வு இருந்தாலும் அவை முழுமையாக சென்றடையவில்லை என்பதே உண்மை. குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து காய்கறிகளை அன்றாடம் வாங்கும் பலரும் பழங்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பழங்கள் ஏன் முக்கியம்
உணவில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவை இருக்கும். ஆனால் இவை எல்லா உணவிலும் சரிசமமாக இருப்பதில்லை. சில உணவுகளில் ஒரு சத்து அதிகமாகவும், சில சத்து குறைவாகவும் இருக்கும். இதை சரிசமமாக பார்த்து எடுத்துகொள்வது இயலாத விஷயம். ஆனால் பழங்களில் இருக்கும் கார்போஹைட்ரேட் நேரடியாக உடலில் சேரும்.
இதை கூட்டு சர்க்கரை என்று சொல்வார்கள். இது நார்ச்சத்துடன் சேர்ந்து இருக்கும் போது உடனடி யாக இரத்தத்தில் கலக்காமல் மெதுவாக கலந்துஆற்றலை தரும். இப்படி தரும் உணவு பொருள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருபவை. நவீன ஆய்வுகளும் கலோரிகள் உட லுக்கு தேவை ஆனால் உடனடியாக உடலுக்குள் வராமல் மெதுவாக நீடித்து இருக்க வேண்டும் என் கிறார்கள். இது லோ கிளைசமீக் உணவாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது பழங்களில் இயற்கையாக இருக்கிறது.
பழங்கள் எப்படி சாப்பிட வேண்டும்
பழங்களை தான் நாங்கள் எடுத்துகொள்கிறோம் என்று மறுக்காமல் சொல்பவர்கள் உண்டு. ஆனால் பழங்களை எப்படி எடுக்க வேண்டும் என்னும் வரைமுறை இருக்கிறது. தினமும் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளை உணவை எடுத்துகொள்கிறோம். காலை இரவு என்றால் ஃடிபன், மதிய வேளையில் சாப்பாடு என்பதுதான் பெரும்பாலோனோரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தினமும் இரண்டு வேளை உணவு ஒரு வேளை பழம் என்ற கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். இப் படி தொடர்ந்து எடுத்துவரும் போது குறிப்பிட்ட நாளில் உடலில் இருக்கும் ஆரோக்கிய குறைபாடு படிபடியாக சரியாக தொடங்கும்.
பழங்கள் எப்போது சாப்பிட வேண்டும்
இப்போது சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிடுகிறார்கள் ஆனால் பழங்களை அப்படி சாப்பிட கூடாது. உணவோடு பழங்களை வைக்கும் போது முதலில் பழங்களை தான் முதலில் சாப்பிட வேண் டும். அப்போதுதான் முழுபயனும் நமக்கு கிடைக்கும். தினமும் ஒரே பழம் என்று எடுக்காமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பழம் என்று கணக்கிட்டு எடுத்துகொள்ள வேண்டும்.
பழத்தை இயல்பாகவே சாப்பிட வேண்டும். பழங்களை நறுக்கி இனிப்பு சேர்த்து சாப்பிடுவதும் தவ றானது. பழத்தை துண்டுகளாக நறுக்கி அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. உணவுக்கு முன் ஒரு பழம் அல்லது பழத்துண்டு என்பதை வழக்கமாக்கி கொள்வதோடு வளரும் குழந்தைகளுக்கும் பழக்குங்கள்.
பழங்களில் கிடைக்கும் போனஸ்
வயதான தோற்றத்தையும் ஆரோக்கிய குறைபாட்டை அதிகரிக்காமலும் பாதுகாக்க பழங்கள் முக்கிய பங்குவகிக்கிறது.பழங்களை தொடர்ந்து எடுக்கும் போது முதலில் செரிமான பிரச்சனை களை சரிசெய்கிறது. அடுத்தது உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை சரிசெய்யப்படுகிறது. அதை தொடர்ந்து நோய்கள் வராமல் காக்கிறது. பழங்களை தொடர்ந்து எடுக்கும் போது புற்றுநோய் வருவது கூட தடைபடுகிறது என்று கண்டறிந் திருக்கிறார்கள். ஆரோக்கியத்தோடு அழகிலும் முக்கிய பங்குவகிக்கிறது. சருமத்தில் சரும துவாரங்களில் அடைப்பை நீக்கி சருமத்துக்கு பொலிவையும் தருகிறது.
அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து கிடைக்கும் என்பதில்லை. இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் நெல்லிக்கனி கூட அதிகப்படியான சத்துகொண்டவைதான். 2 ரூபாய்க்கு கிடைக்கும் வாழைப்பழமும் சத்துமிக்கவைதான். சீஸனின் போது கிடைக்கும் பழங்களை தவிர்க்காமல் வாங்கி சாப்பிடுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பருவத்திலிருந்தே அவ்வபோது பழங்கள் பழகாமல் அன்றாடம் சாப்பிட பழக்குங்கள். சருமமும் ஆரோக்கியமும் ஜொலிக்க வளருவார்கள்.