ஆப்நகரம்

கோடை காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க...

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உடல் பல உபாதைகளை சந்திக்கிறது. குறிப்பாக உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டிப்பட்டு அதன் ஓட்டம் பாதிக்கிறது.

Samayam Tamil 23 Mar 2019, 11:49 pm
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உடல் பல உபாதைகளை சந்திக்கிறது. குறிப்பாக உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டிப்பட்டு அதன் ஓட்டம் பாதிக்கிறது. அதனால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுவதால் சட்டென்று தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. உடலில் இதுபோன்று ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க, குறிப்பாக உடல், தனது நீர்ச்சத்தை இழக்காமல் காத்து கொள்ள வேண்டும்.
Samayam Tamil sun hot


குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வெயிலில் நடமாட்டத்தை குறைத்து கொள்வது நல்லது. பகலில் நடமாடும் போது குடைகளை பயன்படுத்த வேண்டும். அதேபோல் ‘பாலிஸ்டர்’ ரக ஆடைகளை தவிர்த்து தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது நல்லது. பருத்தி ஆடைகள் வியர்வையை நன்கு உறிஞ்சும் தன்மை கொண்டது. மற்ற ரக ஆடைகள் வியர்வையை உறிஞ்சாது. அதனால் உடலில் அரிப்பு, கொப்பளங்கள் உண்டாகி தோல் நோய்கள் ஏற்படும். இதை தவிர்க்க காலை, மாலை என 2 முறை குளிப்பது நல்லது.

அதேபோல் டீ, காபி, குளிர்பானங்களை தவிர்த்து மோர், இளநீர், பதநீர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ணுவது உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கும். வெயிலில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் குளிர்சாதன பெட்டிகளில் ஜில்லென்று இருக்கும் தண்ணீரை எடுத்து குடிக்க கூடாது. சிறிது நேரம் கழித்து மண்பானை தண்ணீரை அருந்தலாம்.

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு தாகம் எடுப்பது தெரியாது. அதனால் அவர்களின் தாகம் அறிந்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களை தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்