ஆப்நகரம்

பெண்கள் உட்கார்ந்தே இருப்பதால் நுரையீரலில் ஏற்படும் இரத்த உறைவை எப்படி தடுக்கலாம்

இன்றைய வாழ்க்கை முறை நம்மளை மிகவும் சோம்பேறி ஆக்கி விட்டது. அதன் விளைவு உட்கார்ந்தே இடத்திலேயே வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி உட்கார்ந்தே இடத்திலேயே வேலை செய்வது உங்களுக்கு நுரையீரலில் இரத்த உறைவு ஏற்பட வழி வகுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறது ஆராய்ச்சி.

Samayam Tamil 26 Apr 2021, 6:20 pm
நுரையீரலில் ஏற்படும் இரத்த உறைவு என்பது நுரையீரல் தக்கயடைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது அவசர மருத்துவ நிலைக்கு நம்மளை உள்ளாக்குகிறது. இந்த இரத்த உறைவால் இறப்பு கூட நேரிடலாம். மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி, இது கண்டறியப்படாத அல்லது சிகிச்சையளிக்கப்படாத மூன்றில் ஒரு பகுதியினரின் மரணத்திற்கு காரணமாகிறது. இது நுரையீரல் பாதிப்பை பெருமளவில் பாதிக்கிறது.
Samayam Tamil how to prevent blood clots without medicines in tamil
பெண்கள் உட்கார்ந்தே இருப்பதால் நுரையீரலில் ஏற்படும் இரத்த உறைவை எப்படி தடுக்கலாம்


​ஆய்வு சொல்வதென்ன?

வாரத்திற்கு 41 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருக்கும் பெண்கள் உயிருக்கு ஆபத்தான நுரையீரல் தக்கயடைப்பை பெறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே உங்க இரத்த ஓட்டத்தை சரி செய்ய அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பது நடப்பது போன்ற முயற்சியில் ஈடுபடுங்கள்.

​நுரையீரல் தக்கயடைப்புக்கு என்ன காரணம்

இரத்தக் கட்டிகள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். நுரையீரல் தக்கையடைப்பு பெரும்பாலும் ஆழ்ந்த நரம்பு த்ரோம்போசிஸால் ஏற்படுகிறது. இந்த நிலையில் உடலில் உள்ள ஆழமான நரம்புகளில் இரத்த உறைவு ஏற்படுகிறது. நுரையீரல் இரத்த உறைவு பெரும்பாலும் கால்கள் மற்றும் இடுப்புகளில் ஏற்படுகிறது.

​உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் தீங்கு

ஒவ்வொரு ஆண்டும் 300,000 க்கும் அதிகமான மக்கள் நுரையீரல் தக்கையடைப்பு நோயால் கண்டறியப்படுகிறார்கள். இது ஒரு தீவிர மருத்துவ நிலை. இரத்த உறைவு ஏற்பட்டு நுரையீரல் தமனியை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பீதி தாக்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஒரு ஆய்வில், நீட்டிக்கப்பட்ட உட்கார்ந்திருத்தல் நுரையீரல் தக்கயடைப்பை அதிகரிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. உண்மையில், ஒரு நாளைக்கு 6 மணிநேரம் அல்லது அதற்கு மேல் உட்கார்ந்த பெண்கள் நுரையீரல் தக்கயடைப்பு நோயால் இறப்பதற்கு 37% அதிக வாய்ப்பு உள்ளது.

​உடல் செயல்பாடுகளை செய்ய வேண்டும்

நுரையீரல் தக்கயடைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இதனால் இதய நோய் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்க உடற்பயிற்சி உதவும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் ஒவ்வொரு நாளும் உட்கார்ந்தே உங்க நேரத்தை கழிப்பதை விட எழுந்து உட்கார்ந்து இருப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

எனவே உங்க வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை மாற்றி அமையுங்கள். தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ள முயலுங்கள். செயலில் இறங்குங்கள், நன்மை கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்