ஆப்நகரம்

காலையில் பல் துலக்கினால் ஆபத்தா?

அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

TNN 26 Mar 2017, 3:20 pm
அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல் துலக்கிய பிறகு தான் மற்ற வேலைகளைக் கூட செய்யத் தொடங்குவார்கள். ஆனால், காலை நேரத்தில் பல் துலக்கினால் ஆபத்து என்று கூறப்படுகிறது. ஏனென்றால், இரவில் தான் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil if you brush your teeth in morning it is danger
காலையில் பல் துலக்கினால் ஆபத்தா?


தினமும் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில், பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன.

இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் காரணமாக பற்கள் சொத்தையாகிறது. மேலும், பல் மற்றும் ஈறுகளில் வலியும் ஏற்படுகிறது. காலை நேரத்தில் எழுந்தது முதல் இரவு நேரம் தூங்குவது வரை பல்வேறு விதமான உணவுகளை நாம் உட்கொள்கிறோம். அது நம் பற்களின் இடுக்களில் ஒட்டிக்கொள்கிறது. நாம் தூங்கிய பிறகு ஒரு மணிநேரத்தில் கிருமிகள் நமது பற்களில் புகுந்து பற்களை சொத்தையாக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன.

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் நமது வாய் மூடியிருந்தால் போதும் கிருமிகள் உட்புகுந்து ஒருவித துர்நாற்றம் வீசும். எனவே காலையில் பற்களை சுத்தம் செய்வதை தவிர்த்து இரவு நேரத்தில் நீங்கள், பல் துலக்கினால், பற்களை சுத்தம் செய்யப்பட்டு எவ்வித கிருமிகளும் பற்களை அண்டாது. எனவே, காலையில் பல் துலக்குவதற்கு பதில், சுடுநீர் அல்லது சுடுநீருடன் கொஞ்சம் உப்பு கலந்து சுத்தம் செய்தால் போதுமானது.

If you brush your teeth in morning it is danger?

அடுத்த செய்தி

டிரெண்டிங்