கல்வியறிவு அதிகம் பெற்று விட்ட இந்த காலத்தில் எதற்காக பெண்களே நாம் இன்னும் அந்த சிறுநீரக பிரச்சனைகளுக்கு அச்சமுடன் வாழ வேண்டும். நாம் காரணங்களை கண்டறிந்து அதிலிருந்து வெளியேறுவதற்கான வழியினை இனி யோசிப்பது அவசியம் ஆகும். இந்த கட்டுரையின் மூலம் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் குறிப்பாக சிறுநீரக குழாயில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதனை பார்க்கலாம்.
உடலுறவிற்கு பிறகு கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும்
இதனை சொல்வது கொஞ்சம் சிரிப்பாக இருக்கலாம். ஆனால் இது அவசியமான ஒன்றாகும். காரணம் என்னவெனில், உடலுறவின் பொழுது பெண்களின் சிறுநீர் பையில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் ஒட்டி கொண்டிருக்கும். உடலுறவிற்கு பிறகு, சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீரக மண்டலம் அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி விடுகிறது. இதன் மூலம், சிறுநீரகத்தை பாதிக்கும் தேவையில்லாத பாக்டீரியாக்கள் அழிகின்றன. எனவே, நம்மை சிறுநீரக குழாய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கழிவறையை சுத்தமாக வைக்க...
பெண்களின் சிறுநீர் குழாயானது அவர்களது பிறப்புறுப்பில் இணைந்துள்ளது. எனவே, சுத்தமான கழிவறையைப் பயன்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.
ஏனெனில், கழிவறையில் ஏற்கனவே இருக்கும் பாக்டீரியாக்கள் போன்ற நச்சு கிருமிகள் பெண்ணுறுப்பை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது சிறுநீரக குழாயினை பாதிக்கலாம். மேலும், சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை நன்றாக கழுவுவது அவசியமாகும்.
பெண்ணின் பிறப்புறுப்பை எப்படியெல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்?... செய்ய வேண்டியது என்ன?
உலர்ந்த உள்ளாடைகள்
பிறப்புறுப்பு ஆனது ஈரமில்லாமல் உலர்ந்த பிறகு உள்ளாடையை அணிய வேண்டும். ஏனெனில், பிறப்புறுப்பின் வழியாக சிறுநீர் குழாயை தாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலின் உள்ளே செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
எனவே, இந்த முறைகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் நம்மால் சிறுநீர் குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பிறப்புறுப்பில் நறுமணப் பொருட்களை தெளிப்பதை தவிர்த்தல்
சந்தையில் ஏராளமான பிறப்புறுப்பு நறுமணமாக இருப்பதற்காக தெளிக்கப்படும் வாசனை திரவியங்கள் தைலங்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதினால் நல்ல நறுமணத்தை தருகின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதில் இருக்கும் வேதியியல் பொருட்கள் நமது பிறப்புறுப்பில் பாக்டீரியாக்களை நச்சு கிருமிகளை உருவாக்கி பெண்ணுறுப்பின் வழியாக சிறுநீரக குழாயினை அடைந்து பாதிப்பினை உருவாக்குகிறது.. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, செயற்கையான இந்த வகையான நறுமண மூட்டிகளை தவிர்க்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து இல்லாமல் இருத்தல்
இந்த நவீன வாழ்வில் பெண்கள் அதிகமாக பயணங்கள் செய்ய வேண்டியிருக்கிறது, ஆண்களுடன் குழுவாக பணி செய்ய வேண்டியிருக்கிறது. பெண்கள் புழங்கும் அனைத்து இடங்களிலும் கழிவறை வசதி இருப்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே, சிறு நீரை வெளியேற்றாமல் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஆனால், இதனை முழுமையாக தவிர்க்க வேண்டும். சிறுநீரக குழாய் வீக்கம், சிறுநீரக கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு இது மிக முக்கியமான காரணமாக அமைந்து விடுகின்றன. மேலும், உணவு முறையிலும் ஏற்பட்ட பெரும்பான்மையான மாற்றங்களின் காரணமாக நாம் நீர் அருந்துவதை குறைக்கிறோம். இது தவறான ஒன்றாகும்.
உடலுக்குத் தேவையான நீர்ச் சத்தை அதிகரிப்பதை அடிப்படை ஒன்றாக நாம் கடைபிடித்தாலே அதிகமான நோயிலிருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், அதிகமாக தண்ணீர் அருந்துவதால் சரியான நேரத்தில் சிறுநீர் வெளியேறுகின்றது. இதன் காரணமாகவே உடலில் பல பிரச்சினைகள் ஏற்படாமல் தடுத்து விட முடிகிறது.
எவ்ளோ ட்ரை பண்ணாலும் காலைல சீக்கிரம் எழுந்திருக்கவே முடியலையா?
சிறுநீரை அடக்குதல்
அதிகமாக தண்ணீர் பருகாமல் இருப்பதும் சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது ஆபத்தாகும். சிறுநீர் தண்ணீரின் நிறத்தில் வெளியேறினால் உடலில் தேவையான அளவிற்கு தண்ணீர் இருக்கிறது என்பதற்கு சான்றாகும். அதேநேரத்தில், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் உடலில் தேவையான தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று புலனாகும். எனவே கட்டாயமாக அதிக தண்ணீரை பருகுங்கள். அதன் மூலம் சிறுநீரக குழாய் பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். உங்கள் எதிர்காலத்தை எந்த உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் இன்றி சரியாக வழி நடத்தி செல்ல முடியும்.