ஆப்நகரம்

கூந்தலை சீவும் முன்பு கவனிக்க வேண்டியவை

ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் தலைமுடியில் அக்கறை காட்டுகிறார்கள்.

TNN 24 Jan 2017, 10:30 pm
ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் தலைமுடியில் அக்கறை காட்டுகிறார்கள். தலைமுடி உதிர்தல், வழுக்கை விழுதல் பெரும் பிரச்னையாக கருதப்படுகிறது. முடி உதிர்தலுக்கும் கூந்தலை சீவுவதற்கும் தொடர்பு உள்ளது. ஆதலால், கூந்தலை சீவும் முன்பு சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
Samayam Tamil listen these things before combing
கூந்தலை சீவும் முன்பு கவனிக்க வேண்டியவை


தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால்முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு தான் வரும்.

கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.

கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும். மேலும் கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். கூந்தலை போனி டைல் போடக்கூடாது.
Listen these things before combing

அடுத்த செய்தி

டிரெண்டிங்