ஆப்நகரம்

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த மும்பை தொழிலதிபர்; இரண்டே நாளில் உயிரிழந்த பரிதாபம்!

மும்பை தொழிலதிபர் ஒருவர், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIMESOFINDIA.COM 11 Mar 2019, 11:02 am
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஷரவன் குமார் சவுத்ரி(43). இவர் சகி நாகாவைச் சேர்ந்தவர். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக போவை ஹிரானந்தனி மருத்துவமனைக்கு, கடந்த வெள்ளிக் கிழமை சென்றுள்ளார்.
Samayam Tamil Hair Transplant


அப்போது அவருக்கு சுவாசப்பதில் சிரமம், முகம் மற்றும் தொண்டையில் வீக்கம் இருந்துள்ளது. இதுகுறித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு அனாபைலிஸ் என்ற அலர்ஜி பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதனை அறிந்த தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் இதயத்தில் பாதிப்பு ஏற்பட, இதய சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதற்குள், சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு ஷரவன் உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சமீபத்தில் 15 மணி முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டது கண்டறியப்பட்டது. அப்போது 9,500 முடிகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில், கடுமையான அலர்ஜி பாதிப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் முடி மாற்று அறுவை சிகிச்சை எந்தளவிற்கு பாதுகாப்பானது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்