ஆப்நகரம்

4 நாள் குழந்தை இதயத்தில் பேஸ்மேக்கர்!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 4 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு இருதயத் துடிப்பு சீராக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு வைரலாகியுள்ளது.

Samayam Tamil 19 Feb 2019, 2:22 pm
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 4 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு இருதயத் துடிப்பு சீராக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு வைரலாகியுள்ளது.
Samayam Tamil heart


பேஸ்மேக்கர் என்னும் கருவி இதயத் துடிப்பில் கோளாறு உள்ள வயோதிகர்களுக்கு பெரும்பாலும் பொருத்தப்படும். ஆனால் ஸ்ட்ராபெர்ரி பழத்தின் அளவே உள்ள 4 நாள் குழந்தையின் இதயத்தில் இது பொருத்தப்பட்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு நிமிடத்துக்கு 140 முறை இதயம் துடிக்கும். ஆனால் இக்குழந்தைக்கு நிமிடத்துக்கு 40 தடவையே இதயம் துடித்தது. இதனை அடுத்து ஹாங்காங்கில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது அளவில் மிகச் சிறிதான பேஸ்மேக்கர். இதன் எடை வெறும் 12.8 கிராம். இது இதயத் துடிப்பை உண்டாக்க உதவும். பேஸ்மேக்கர் ஏற்படுத்தும் மின் அதிர்வு இதயத் துடிப்பை சீராக்கும். அளவுக்கு அதிகமாகத் துடிக்கும் இதயத்தை சராசரி துடிப்பு எண்ணிக்கைக்கு கொண்டுவரும். இதயம் சராசரி அளவைவிட குறைவாகத் துடித்தால் இதயத் துடிப்பை அதிகரிக்கும்.

குழந்தைக்குப் பொருத்தப்பட்ட இந்த பேஸ்மேக்கர் ஐந்து வயது வரைதான் பயன்படும். அதன் பிறகு இக்குழந்தைக்கு மீண்டும் ஓர் அறுவை சிக்கிசை செய்யப்படும்.
இந்த அறுவை சிகிச்சை இந்திய மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு மனிபால் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இக்குழந்தைக்கு இதயக் கோளாறு இருப்பது பிரசவத்துக்கு முன்னர் ஸ்கேன் சோதனையிலேயே தெரியவந்தது. ஆனால் மருத்துவர்கள் இதற்கு தீர்வு உண்டு என தீர்க்கமாகக் கூறியதை அடுத்து குழந்தையை கலைக்காமல் பெற்றுக்கொள்ள பெற்றோர் முடிவெடுத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்