ஆப்நகரம்

புற்றுநோயை உருவாக்கும் பிளாஸ்டிக் இட்லி!

பிளாஸ்டிக் கப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இட்லியால் புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

TNN 11 Jun 2017, 4:02 pm
பிளாஸ்டிக் கப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இட்லியால் புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Samayam Tamil plastic cup idly causes cancer
புற்றுநோயை உருவாக்கும் பிளாஸ்டிக் இட்லி!


இட்லி ஆவியில் வேகவைக்கப்படுவதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவாக இட்லி பார்க்கப்படுகின்றது. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அனைத்திலும் இருப்பதால், இந்த இட்லி உணவையும் விட்டுவைக்கவில்லை.
ஹோட்டல்கள் மட்டுமில்லாமல், திருமணங்கள் போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு இட்லி தயாரிக்கும் போது பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பேப்பர் விரித்து அதில் இட்லி மாவு ஊற்றி உணவு தயாரிக்கப்படுகின்றது.

இப்படி பிளாஸ்டிக் கப்பில் இட்லி தயாரிப்பது ஏன்? என கேட்டதற்கு, இட்லி மாவில் அரிசி அல்லது உளுந்து அதிகமானால் இட்லி துணியில் ஒட்டிக்கொள்ளும். அதனால் பிளாஸ்டிக் கப்பில் தயாரிக்கப்படுகின்றது. இப்படி செய்வதால் உணவை சரியான நேரத்தில் பரிமாறப் முடிகின்றது என தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய்:
இப்படி பிளாஸ்டிக் கப்பில் இட்லி உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கப்படுவதால் இரைப்பை கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்