ஆப்நகரம்

Tips To Control Anger : கோபம் உள்ளுக்குள் வந்தால் என்ன நடக்கும்... சத்குரு சொல்லும் விளக்கத்தை கேளுங்க...

இன்பம், துன்பம், அழுகை, சிரிப்பு ஆகியவற்றை போன்று கோபம் என்பதும் ஒருவகை உணர்ச்சி. ஆனால் கோபம் என்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. சுற்றியுள்ளவர்களுக்கும் அது அமைதியை தருவதில்லை. இத்தகைய கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அதை வர விடாமல் தடுப்பதற்கு கோபத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதை எப்படி புரிந்து கொள்வது என்பது குறித்து சத்ரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் கோபம் குறித்து நிறைய இடங்களில் விளக்கியிருக்கிறார். அதில் அவர் கூறும் சில விஷயங்களை நாம் பார்க்கலாம்.

Authored byமணிமேகலை | Samayam Tamil 8 Jun 2023, 6:10 pm
கோபம் என்பது இயலாமை, ஆற்றாமை, பழி வாங்கும் உணர்ச்சி போன்ற பல்வேறு விஷயங்கள் நம்முடைய மனதை அழுத்தும் போது உண்டாகிற ஓர் உணர்ச்சியாக இருக்கிறது. கோபப்படும்போது பலருக்கும் தான் என்ன செய்கிறோம் என்று தங்களுக்கே தெரியாது. இந்த கோபம் குறைந்தபின்னும் அதன் விளைவுகள் தொடர்வதில்லை. கோபம் தவறு என்று உணரும்போது அது குற்ற உணச்சியை தூண்டி விடுகிறது.
Samayam Tamil sadhguru describes about anger and how to control it
Tips To Control Anger : கோபம் உள்ளுக்குள் வந்தால் என்ன நடக்கும்... சத்குரு சொல்லும் விளக்கத்தை கேளுங்க...


​கோபத்தை தவிர்ப்பது எப்படி


கோபத்தை தவிர்க்க முடியாது, தவிர்க்கவும் தேவையில்லை. ஒரு செயலை நாம் தான் சந்திக்கிறோமே தவிர அந்த செயல் நம்மை தேடி வருவதில்லை.

அதாவது கோபம் நமக்கு வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் தான் கோபத்திற்குள் நுழைகிறோம்.

​அமைதியை குலைக்கும்

கோபம் ஒரு அரூபமான பொருள் தான். ஆனாலும் அதை நாடிச்செல்கிறோம்.

ஒரு செயலை நாம் செய்கிறோம் என்றால் அது ஏதேனும் ஒரு வகையில் நமக்கோ நம்மை சுற்றி உள்ளவர்களுக்கோ பலன் தர வேண்டும். ஆனால் கோபம் என்பது நமக்கு அமைதியைத் தருவதில்லை. நாம் கோபப்படும் நபருக்கோ செயலுக்கோ கூட அமைதியை தராது. அதனால் கோபம் என்பது தேவையற்ற ஒன்றாக மாறிவிடுகிறது.

​அறிவியல் சொல்வது?

நாம் கோபப்படும்போது நம்முடைய மனம், உடல் மட்டுமல்ல அது நம்மையும் வாழும் சமுதாயத்தையும் சேர்த்தே விஷத்தன்மை உடையதாக மாற்றிவிடுகிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஏன் நம்மை நாமே விஷத்தன்மை உடையவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

​கட்டுப்படுத்த முடியாது

நீங்கள் கோபமாக இருக்கும்போது உங்களுடைய உடல், மனம் இரண்டுமே நீங்கள் சொல்லும் கட்டளைகளையே கேட்காது.

உங்களை நீங்களே அவமதித்தல் கோபத்தின் போது தான் நிகழும். அதனாலேயே கோப் கொள்ளாமல் ஒரு செலை அணுகுவது நல்லது.

நீங்கள் சொல்வதை உங்களுடைய மனம் கேட்கிறது என்றால் அது அமைதியாக இருக்கிறது என்று அர்த்தம்.


எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்