ரத்தக் குழாய்கள் இறுக்கமடையும்
சிவப்பு இறைச்சியில் உள்ள கார்னிடைன் என்னும் சேர்மம் அட்ரீனல் மற்றும் மற்ற ரத்தக் குழாய்களை இறுக்கமடையச் செய்கிறது.
அதோடு இந்த சிவப்பிறைச்சியில் வேறு சில வேதிச் சேர்மங்களும் இருக்கின்றன. அவை கார்னிடைன் சேர்மத்தையும் இதய பாதிப்பை ஏற்படுத்தும் டிரைமெத்திலமைன் - N-ஆக்ஸைடு அதிகரிக்கிறது.
இதனால் ரத்தக் குழாய்களில் இறுக்கம், அடைப்பு போன்றவை உண்டாகின்றன. இவை அதிகமாகுமு்போது இதயக் கோளாறுகள் உண்டாகின்றன.
குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போதும், அடிவயிற்று வலி, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவை அதிகரிக்கும் போது குடலில் ஈகோலி என்னும் பிரச்சினை உண்டாகிறது.
பொதுவாக அதிகப்படியான கொழுப்பு வயிறு மற்றும் குடலில் தேங்குகிற பொழுது இந்த பிரச்சினை உண்டாகும். குறிப்பாக, பதப்படுத்தாத பச்சைப் பாலில் உள்ள கொழுப்பு போன்றவற்றால் இந்த பிரச்சினை அதிகமாகும்.
அதேபோல தான் சிவப்பு இறைச்சி அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அவற்றில் உள்ள கொழுப்பு பசையத்தின் காரணமாக குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உண்டாகும்.
டைப் 2 நீரிழிவு
சிவப்பு இறைச்சி அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எடுத்துக் கொள்ளும் அளவு மிக முக்கியம்.
ஒரு நாளைக்கு 100 கிராம் அளவுக்கு பிரஷ்ஷான சிவப்பு இறைச்சியோ அல்லது 50 கிராம் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியோ ஒருவர் எடுத்துக் கொள்கிறார் என்றால், அவருக்கு டைப் 2 நீரிழிவு ஏற்படுவதற்கான அபாயம் 11 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கிறதாம்.
மூளை செயல்பாடு பாதிக்கும்
சிவப்பு இறைச்சியில் கொழுப்பைப் போலவே அதிக அளவில் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது. அளவுக்கு அதிகமாக இரும்புச் சத்தை உடல் உட்கிரகிக்கும்போது மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு அது அல்சைமர் நோய் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.
அயர்ன் மூளையில் சென்று அதிகமாகத் தங்குகிறபோது, அது நரம்பு திசுக்களைப் பாதிக்கிறது. இதனால் மூளைக்கும் நம் உடலுக்குமான தகவல் தொடர்பில் தொய்வு ஏற்பட்டு அல்சைமர் உண்டாக வழிவகுக்கிறது.
ஹார்மோன் பிரச்சினைகள்
சிவப்பு இறைச்சி அதிகமாக சாப்பிடுவதால் ஹார்மோன் பிரச்சினைகளால் ஏற்படுகின்ற புற்றுநோய் போன்ற மோசமான நோய்களை உண்டாக்கும் அபாயம் அதிகம். குறிப்பாக மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் 90 ஆயிரம் பெண்களை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அதில் ஒரு நாளைக்கு 200 கிராம் அளவுக்கு சிவப்பு இறைச்சியை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் இரண்டு மடங்காக இருந்தது.
இதுவே வாரத்தில் மூன்று முறை மட்டும் எடுத்துக் கொண்டவர்களுக்கு அவர்களை விட ஹார்மோன் பிரச்சினைகளும் மார்பகப் புற்றுநோய் அபாயமும் சற்று குறைவாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.