ஆப்நகரம்

tomato ketchup: தக்காளி சாஸ் சாப்பிட்டா இவ்வளவு பிரச்சினைகள் வருமா... இனிமே சாப்பிடணுமானு யோசிங்க...

சமோசா தொடங்கி பிரெஞ்ச் ஃபிரைஸ், சப்பாத்தி, பர்கர், சாண்ட்விச் என அத்தனைக்கு இன்றைக்கு தொட்டுக்கொள்ள கெட்சப் தான் பயன்படுத்துகிறோம். தக்காளியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அதை கெட்சப்பாக சாப்பிடும்போது நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

Samayam Tamil 19 Jan 2022, 3:34 pm
ஆரம்பத்தில் ஸநாக்ஸ் வகைகள் சாப்பிடும்போது மட்டும் கெட்சப்கள் பயன்படுத்தி வந்தோம். அதன் சுவைக்கு வீட்டில் உள்ள குழந்தைகளும் அடிமையாகிவிட்டார்கள்.
Samayam Tamil side effects of eating tomato ketchup in tamil
tomato ketchup: தக்காளி சாஸ் சாப்பிட்டா இவ்வளவு பிரச்சினைகள் வருமா... இனிமே சாப்பிடணுமானு யோசிங்க...


இப்போது சப்பாத்தி, பராத்தா, பிரெட் , நூடுல்ஸ் என அவர்கள் விரும்பி சாப்பிடுகிற அத்தனை உணவுகளுக்கும் அவர்களை சரியாக சாப்பிட வைக்கிறேன் என்று கூறி கெட்சப்களை ஊற்றிக் கொடுத்துவிடுகிறோம். அவ்வளவு ஏன் பெரியவர்கள் கூட தக்காளி சாஸ் சுவைக்குப் பழகிவிட்டோம். அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தைப் பற்றி நாம் உணர்வதே இல்லை.

​தக்காளி சாஸ் ஏன் ஆபத்தானது?

நிபுணர்களின் கருத்துப்படி, பாட்டிலில் அடைக்கப்பட்ட கெட்சப்களில் அவை கெட்டுப் போகாமல் இருப்பதற்கான அதிக அளவில் பதப்படுத்திகளும் ரசாயனப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன.

வெறுமனே சுவையைக் கூட்டுவதற்காக மட்டுமே சேர்க்கப்படுகின்ற இந்த ரசாயனப் பொருள்கள் உடலுக்குத் தீமை செய்வனவே தவிர நன்மை செய்வன அல்ல.

பொதுவாக தக்காளி சாஸில் அதிகமாக சர்க்கரை, உப்பு, கார்ன் சிரப், ஃபிரக்டோஸ் மற்றும் வேறு சில பதப்படுத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.

​வயிறு மற்றும் நெஞ்செரிச்சல்

தக்காளியில் சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் அதிக அளவில் இருப்பது நமக்குத் தெரிந்ததே. அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

இந்த அமிலங்கள் வயிற்றுக்குள் நிறைய செல்லும்போது அது வயிற்றுக்குள் இருக்கும் கேஸ்ட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து, நீங்கள் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுத்து விடுகிறது.

அதனால் தக்காளி அல்லது தக்காளி சாஸை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

தினமும் 2 ஸ்பூன் எள் சாப்பிட்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்... எப்படி சாப்பிடலாம்...


​உடற்பருமன்

தக்காளி சாஸில் அதிக அளவில் சர்க்கரையும் மற்ற பதப்படுத்திகளும் சேர்க்கப்படுகின்றன. இது இயல்பாவே உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்து, உடல் பருமனை ஏற்படுத்த வழிவகை செய்கிறது.

இனனொரு அதிர்ச்சியான விஷயமும் இதில் இருக்கிறது. அளவுக்கு அதிகமாக கெட்சப் சாப்பிட்டால் உடலில் இன்சுலின் சுரக்கும் அளவும் குறைந்துவிடுமாம்.

​அலர்ஜி

வழக்கமாக தக்காளி சாஸ் (கெட்சப்) சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு உடலில் நிறைய அலர்ஜி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வாந்தி, டயேரியா என சாப்பிடும் அளவு மற்றும் நபருக்கு ஏற்றபடி வெவ்வேறு வகையான அழற்சிகளும் பிரச்சினைகளும் ஏற்படும்.

பச்சையாக வெங்காயம் சாப்பிடலாமா? சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்...


​இதய நோய்கள்

அடிக்கடி தக்காளி சாஸ் பழக்கம் இருந்தால் அது நம்முடைய உடலில் ப்ரக்டோஸின் அளவை அதிகரிக்கச் செய்து விடும்.

கார்ன் சிரப், கெட்சப் போன்றவை நம்முடைய உடலில் ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்கச் செய்வதால் இதய நோய்கள் ஏற்படுவது அதிகரிக்கும்.

​மூட்டுவலி

உணவில் அதிக அளவில் பதப்படுத்திகள் சேர்க்கப்படும்போது அது உடலில் பல்வேறு வகை தொற்றுக்கள் உருவாகக் காரணமாகிறது.

குறிப்பாக மூட்டுவலி, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தக்காளி சாஸில் அதை பதப்படுத்தி வைப்பதற்கான ஏராளமான உப்பும், வெஜிடபிள் ஆயிலும் அவற்றோடு சர்க்கரை போன்ற பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன.

அதனால் அதிகமாக கெட்சப் சாப்பிடும்போது மூட்டுவலி பிரச்சினைகள் வரும்.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அற்புத பழம் ப்ளூபெர்ரி...


​சிறுநீரகக் கற்கள்

அதிக அளவிலான சோடியம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அது நம்முடைய உடலிலும் சோடியத்தின் அளவை மிக அதிகமாக்கிவிடும்.

உடலில் அதிக அளவில் சோடியம் சேருவதால், சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தூண்டுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்