ஆப்நகரம்

அரிசிக்கும், சருமத்திற்கும் என்ன சம்பந்தம்? குடும்ப பெண்களுக்கு டிப்ஸ்!

அரிசி கழுவிய தண்ணீரில் பல நன்மைகள் இருப்பது தெரியுமா?

TNN 11 May 2017, 9:48 pm
அரிசி கழுவிய தண்ணீரில் பல நன்மைகள் இருப்பது தெரியுமா? அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு பயன்படுத்த பயன்படுத்தலாம். அரிசி கழுவிய பிறகு அதன் தண்ணீரைக் கொண்டு முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
Samayam Tamil so many benefits to womans using rice washed water
அரிசிக்கும், சருமத்திற்கும் என்ன சம்பந்தம்? குடும்ப பெண்களுக்கு டிப்ஸ்!


அரிசியை சுத்தமான தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து நன்றாக 2 முறை கழுவுவ வேண்டும். பின்னர் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைத்து முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவு பெரும்.

கூந்தல் அதிக வறட்சியோடு இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசிய பிறகு, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் சுத்தமான நீரில் கூந்தலை அலச வேண்டும்.

அப்படி செய்தால், கூந்தலின் மென்மைத் தன்மை அதிகரிக்கும். மேலும், முடியின் உண்மையான நிறமும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்