ஆப்நகரம்

கொரோனாவை குணப்படுத்துமா எலுமிச்சை? வாங்கி குவிக்கும் சீன மக்கள்! டாக்டர் சொல்லும் உண்மைகள்!

திடீரென்று சீனாவில் லெமன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சீன விவசாயிகள் ஆர்டர்களை ஒப்படைக்க இரவு பகலாக உழைத்து வருவதாகவும், கடந்த சில தினங்களில் மட்டும் சீன எலுமிச்சைகளின் விலை பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றனர். சீன எலுமிச்சைகளில் அப்படி என்ன ஆரோக்கிய நலன் இருக்கிறது? எதற்காக மக்கள் இதை வாங்கி குவிக்கின்றனர் என்பதை பார்க்கலாம்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 21 Dec 2022, 2:15 pm
உலகம் முழுவதும் தற்போதுதான் கோவிட் தொற்றின் அபாயம் குறைந்துள்ள நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக கோவிட் தொற்று அதிகரித்து வருவதாகவும், இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் மருந்து மற்றும் மருத்துவ சேவைகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
Samayam Tamil lemon for corona


இந்நிலையில் திடீரென்று எலுமிச்சைகளின் தட்டுப்பாடு அதிகரித்து விட்டது. விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 150 ருபாய் வரை விற்பனை ஆகி வருகிறது. விவசாயிகள் விற்பனைக்கு அனுப்ப எலுமிச்சை இல்லாமல் தட்டுப்பாடு நிலவும் அளவுக்கு எலுமிச்சைகள் விற்று தீர்ந்துள்ளன.

இதற்கு காரணம், சமீபத்தில்தான் சீனாவில் மக்கள் போராட்டத்தின் காரணமாக ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொரோனா கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டது. இதனால், திடீரென்று கொரோனா பரவல் வேகமெடுத்து முக்கிய நகரங்களை தாக்கி வருகிறது. இதனால், ஏற்பட்ட மருந்து தட்டுபாட்டாலும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி கொள்ளவும் மக்கள் வைட்டமின் C நிறைந்த எலுமிச்சை உள்ளிட்ட பழங்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

எலுமிச்சையில் வைட்டமின் C அதிகமாகவும் , போலேட், அயர்ன், பொட்டாசியம், வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B5 ஆகியவையும் உள்ளன. வைட்டமின் c நிறைந்த மற்ற உணவுகளை விட கலோரியை அதிகரிக்காமலேயே உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பவர் லெமனுக்கு உண்டு.

ஆனால், எலுமிச்சையை வாங்கி குவிப்பதால் மட்டும் கொரோனவை தடுத்து விட முடியுமா என்று ஊட்டச்சத்து நிபுணரான பரிமளாதேவி குமாரசாமி அவர்களிடம் கேட்டபோது, எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுமே தவிர, கொரோனா வராமல் தடுக்க இது மட்டுமே போதாது என்று கூறுகிறார்.

அதே போல், மற்றொரு மூத்த ஊட்டச்சத்து நிபுணரான விஜயஸ்ரீ அவர்களிடம் கேட்டபோது, லெமன் சாப்பிட்டால் கொரோனா வராது என்று நம்புவதெல்லாம் அறிவியல்பூர்வமான விஷயம் அல்ல.நீங்கள் நீண்ட காலமாக இதை உங்கள் உணவில் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் கொரோனா வந்தவர்களுக்கு அந்த சமயத்தில் தேவைப்படும் அதிகமான நோயெதிர்ப்பு சக்திக்கு இது உதவலாம்.

குறிப்பாக சிறு குழந்தைகள், வயதானவர்களுக்கு இது உதவியாக இருக்கும். ஆனால்,திடீரென்று பயன்படுத்துவது, கோவிட் வந்த பிறகு சாப்பிடுவது பலன் தராது. அதே போல, அதிகமாக இதை எடுத்து கொள்வதும் உங்களுக்கு வேறு விதமான உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் உங்கள் மருத்துவரிடம் கேட்டுவிட்டுதான் செய்ய வேண்டும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்