கருவுற்றது முதல் பிரசவம் வரை ஒரு பெண்ணின் கருப்பை ஆனது பேரிக்காய் அளவில் இருந்து தர்பூசணி அளவு வரை வளரும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு கருப்பை பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. மாதவிடாய் நின்ற பெண்களில் பெரிதாக்கப்பட்ட கருப்பை என்பது மிகவும் பொதுவான ஒரு விஷயம். அதே மாதிரி குழந்தை பிறப்புக்கு பிறகும் இந்த மாதிரியான நிலை ஏற்படலாம். ஆனால் தங்களுக்கு கருப்பை பெரியதாக இருப்பதே சில பெண்களுக்கு தெரிவதில்லை. இடுப்பு பரிசோதனையின் போது தான் அதை அவர்கள் கண்டறிகின்றனர்.
கருப்பை விரிவடைவதற்கு கருப்பை நார்த்திசுக் கட்டிகள் மற்றும் அடினோமயோசிஸ் காரணமாக அமைகிறது. கருப்பை பெரிதாகும் போது அடிவயிற்றில் ஒரு கனம் உண்டாகிறது. உங்கள் வயிறு நீண்டு கொண் டிருப்பதை நீங்கள் கவனிக்க முடியும்.
விரிவாக்கப்பட்ட கருப்பைக்கு காரணம் நார்த்திசுக் கட்டிகள்:
கருப்பை விரிவடைவதற்கு ஃபைப்ராய்டுகள் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாக உள்ளது. கருப்பை நார்த்திசுக் கட்டிகள் புற்றுநோயற்ற கட்டிகள் என்றால் கூட இது கருவுறுதலை பாதிக்கிறது. இந்த கட்டிகள் பல பவுண்ட் எடையுள்ள சிறிய கட்டிகள் ஆகும். அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் (OWH) மகளிர் சுகாதார அலுவலகத்தின்படி, 20 அல்லது 80 சதவீத பெண்களுக்கு 50 வயதிற்கு முன்பே கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
40 மற்றும் 50 களின் முற்பகுதியில் உள்ள பெண்களுக்கு இது மிகவும் பொது வானவை. இந்த நார்த்திசுக்கட்டிகள் வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தலாம். இந்த நார்த்திசுக்கட்டிகள் சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மலக்குடலில் அழுத்தம் உண்டாகலாம். அதே நேரத்தில் இந்த நார்த்திசுக்கட்டிகள் கருப்பையை பெரிதாக்க வாய்ப்பு உள்ளது.
விரிவாக்கப்பட்ட கருப்பைக்கு காரணம் அடினோமயோசிஸ்
அடினோமயோசிஸ் என்பது புற்றுநோயற்ற நிலை ஆகும். இது நார்த்திசுக் கட்டிகளின் அறிகுறிகளை பிரதிபலிக்கிறது. இதில் கருப்பையின் புறணியானது கருப்பையின் தசைச் சுவரை நேரடியாக பாதிக்கிறது. இதனால் மாதவிடாய் சுழற்சியின் போது தசையின் செல்கள் இரத்தப்போக்கு, வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அடினோமயோசிஸ் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. கடுமையான சந்தர்ப்பங்களில் இது மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு மற்றும் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும். மனித இனப்பெருக்கம் என்ற மருத்துவ இதழில் 985 பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பங்கேற்ற சுமார் 20 சதவீதத்தினருக்கு அடினோமயோசிஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதுவும் கருப்பை பெருக்கத்துக்கு காரணமாகிறது.
விரிவாக்கப்பட்ட கருப்பைக்கு காரணம் பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட் ரோம்
பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் பிரச்சனை இருந்தாலும் அது கருப்பையை பெரிதாக்குகிறது. இது மாதவிடாயின் போது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. OWH இன் படி, குழந்தை பிறக்கும் வயதுடைய 10 பெண்களில் ஒருவரை இது பாதிக்கிறது. எண்டோமெட்ரியல் லைனிங்கின் திரட்சியானது கருப்பையின் வீக்கம் மற்றும் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
விரிவாக்கப்பட்ட கருப்பைக்கு காரணம் எண்டோமெட்ரியல் புற்றுநோய்
நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் (NCI) படி, எண்டோமெட்ரியல் புற்றுநோய் பெரும்பாலும் 55 முதல் 64 வயதுடைய பெண்களில் கண்டறியப்படுகிறது. 2017 இல் மட்டும் 61,380 புதிய வழக்குகள் இருந்தது என்றூ NCI கூறியுள்ளது. இந்த எண்டோமெட்ரியல் புற்றுநோயும் விரிவாக்கப்பட்ட கருப்பைக்கு காரணமாகலாம்.
விரிவாக்கப்பட்ட கருப்பைக்கு காரணம் மாதவிடாய் சுழற்சி
பெரிமெனோபாஸ் என்பது ஒரு பெண் மாதவிடாய் நிற்கும் முன் உள்ள நிலையாகும். இதுவும் கருப்பை விரிவாக்கத்திற்கு காரணமாகிறது. ஹார்மோன் அளவுகளில் ஏற்ற இறக்கம் காரணமாக இது ஏற்படலாம்.
நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா வாழ சித்த மருத்துவம் சொல்லும் 8 விஷயங்கள்!
சீரற்ற ஹார்மோன் அளவுகள் கருப்பையை பெரிதாக்க வாய்ப்பு உள்ளது. எனினும் இவர்களுக்கு மாதவிடாய் நின்ற பின் கருப்பை பழைய நிலைக்கு திரும்பும்.
விரிவாக்கப்பட்ட கருப்பைக்கு காரணம் கருப்பை நீர்க்கட்டிகள் :
கருப்பை நீர்க்கட்டிகள் கருப்பையின் மேற்பரப்பில் வளரக் கூடியது. கருப்பை நீர்க்கட்டிகள் விரிவாக்கப்பட்ட கருப்பையையும், தீவிரமான சிக்கல்களையும் ஏற்படுத்தும். அதில் கருப்பை பெரிதாவதும் ஒன்று.
விரிவாக்கப்பட்ட கருப்பை இருந்தால் அறிகுறிகள்
பெரிதாக்கப்பட்ட கருப்பை இருந்தால் அது பலவீனம், தசைப்பிடிப்பு, மலச்சிக்கல், உடலுறவின் போது வலி மற்றும் மாதவிடாய் அசாதாரணங்கள் போன்ற பல அறிகுறிகளை ஏற்படுத்தலாம். அதிக இரத்தப்போக்கு மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
சிலருக்கு அடிவயிற்றின் மேல் கனம் இருந்ததாக தோன்றும்.
அதிகப்படியான மாதவிடாய் இரத்த போக்கு இரத்த சோகையை உண்டாக்கலாம்.
பலவீனம் மற்றும் வெளிர் நிற தோற்றம் தோன்றும்.
இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு
மலச்சிக்கல்
கால்களில் வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு
முதுகுவலி
சிறுநீர் கழிக்க அவசரம்
மாதவிடாய் நின்ற பிறகு இரத்த போக்கு
உடலுறுவின் போது வலி ஏற்படுதல் போன்றவை உண்டாகும்.
கருப்பை பெரியதாக இருப்பதை உடல் பரிசோதனை மற்றும் இமேஜிங் முறை மூலம் அறியலாம். இதை ஆரம்பத்திலேயே கண்டறியா விட்டால் கருப்பை நீக்கம், கருச்சிதைவு மற்றும் இளம்பெண்களுக்கு கருவுறுதல் இழப்பு நேரிடலாம்.