ஆப்நகரம்

பெண்களே உஷார்! லிப்ஸ்டிக் போட்டால் புற்றுநோய் வருமாம்! உங்களுக்கு தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் அழகு சாதனங்களை பயன்படுத்துகிறார்கள்.

TNN 16 Apr 2017, 5:45 am
ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் அழகு சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் ரசாயனங்கள் கலந்திருப்பது அவர்களுக்கு தெரியுமோ? தெரியாதோ? இந்த ரசாயனங்கள் அவர்களது உடலில் கலந்து பக்கவிளைவுகளும், நோய் தொற்றுகளையும் உண்டாக்குகின்றன என்பது அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது.
Samayam Tamil there is a some disease occurred when using lipstick
பெண்களே உஷார்! லிப்ஸ்டிக் போட்டால் புற்றுநோய் வருமாம்! உங்களுக்கு தெரியுமா?


பெண்கள் கூந்தலுக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் தொடங்கி கால் நிகங்களுக்கு பாலீஸ் போடுவது வரை அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களின் மூலம் 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பெண்கள் உடம்பிற்குள் செல்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..

ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்புவில் மட்டும் 15 ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றனவாம். இதன் காரணமாக கண் எரிச்சல், கண் பார்வை கோளாறு, பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தலைக்கு போடும் ஹேர் ஸ்பிரேயில் 11 ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. ஆபத்து விளைவிக்கும் இந்த ரசாயனங்களால், அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறு போன்றவை ஏற்படக்கூடும்.

கண்களுக்கு போடும் அழகு சாதன பொருட்களில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் அதிகளவில் கலக்கப்படுகின்றன. இதன் விளைவாக புற்றுநோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

உதட்டுக்கு பூசப்படும் சாயத்தில் கிட்டத்தட்ட 33 ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. இது எளிதாக நம் உடலுக்குள் சென்று புற்றுநோய் ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்