ஆப்நகரம்

ஏசியால் இவ்வளவு பிரச்சனையா? இனிமேல் ஏசி வேண்டவே வேண்டாம்!

ஒரு காலத்தில் ஏ.சி. என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது. இன்று பெரும்பாலான அலுவலகங்கள் எல்லாமே ஏ.சி. வசதியுடன் தான் செயல்படுகின்றன.

TNN 28 Mar 2017, 2:46 pm
ஒரு காலத்தில் ஏ.சி. என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது. இன்று பெரும்பாலான அலுவலகங்கள் எல்லாமே ஏ.சி. வசதியுடன் தான் செயல்படுகின்றன. பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் என்று எல்லாமே ஏ.சி.யாக அவதாரம் எடுத்திருக்கிறது.
Samayam Tamil there is so many diseases in ac
ஏசியால் இவ்வளவு பிரச்சனையா? இனிமேல் ஏசி வேண்டவே வேண்டாம்!


ஏசி அறைகளில் வேலை செய்வதால் உடலியல் சார்ந்த பிரச்சினைகளும், நோய்களும் உண்டாவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏ.சி.யில் இயற்கையான காற்று கிடையாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதை பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. மேலும் அறையில் உள்ள வெப்பமான காற்றை வெளியேற்றுகிறது.

ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏ.சி. காற்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் அரிப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படக்கூடும். அலர்ஜி உள்ளவர்கள் ஏ.சி.யில் இருந்து விலகி இருப்பதே நல்லது.

குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏ.சி.யில் படிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அவற்றில் 'லிஜினல்லா நிமோபிலியா' என்ற பாக்டீரியா வளரும். இது ஏ.சி.யில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. சுவாசப் பாதையில் இந்த வகை பாக்டீரியா பரவினால் கடுமையான நிமோனியாவை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வீடுகளில் விண்டோ ஏ.சி.யின் பின்பக்கம் புறாக்கள் வசிக்கும். புறாக்களின் கழிவுகளில் கிரிப்டோக்காக்கஸ் எனப்படும் பூஞ்சைகள் அதிகளவில் வளரும். இந்த பூஞ்சையானது மனித மூளையைத் தாக்கக் கூடியது. மேலும், சுவாசப் பாதையையும், மூளையையும் தாக்கி 'க்ரிப்டோகாக்கல் மெனிஞ் சைட்டிஸ்' எனும் ஆபத்தான நோயை உருவாக்கக் கூடியது.

மேலும், ஏ.சி.யில் இருப்பவர்களுக்கு, சூரியனிடமிருந்து கிடைக்கும் வைட்டமின் டி கிடைக்காமல் போய்விடும். இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவைப்படும் ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும்.

ஏ.சி.க்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி இருந்தால் சைனஸ் எனப்படும், மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற்போல இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள் ஏ.சி.யை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்