பெண்ணுறுப்புப் பகுதி
பெண்ணுறுப்பு பகுதி தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் உறுப்பு என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். இது உண்மை என்றாலும் பெண்ணுறுப்பு பகுதியை சுத்தமாகவும் கூடுதல் கவனிப்புடன் வைத்திருப்பது அவசியம் ஆகிறது. இது குறித்து மகப்பேறியியல் மருத்துவர் கூறுகையில் பெண்ணுறுப்பு பகுதியில் பெண்கள் செய்யும் பொதுவான தவறுகள் குறித்து எடுத்துக் கூறுகிறார்.
உதாரணமாக பெண்ணுறுப்பு பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து விடுகின்றனர். இன்னும் நாம் செய்யும் நிறைய தவறுகளை அவர் எடுத்துக் கூறுகிறார்.
உங்க அழுக்கு கைகளால் அதைத் தொடுவது
உங்க அந்தரங்க பகுதியை தொடுவதற்கு முன்பு உங்க கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அழுக்கு கைகளால் தொடும் போது பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் தொற்றுக்கள் நேர வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி தேய்த்து குளிப்பதற்கு முன்பு நீங்கள் லூஃபாவை பயன்படுத்தினால் அவற்றை அங்கே பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
மூச்சுக்குழாயில அடிக்கடி அழற்சி ஆகுதா? அதை எப்படி செலவில்லாம வீட்லயே சரிசெய்யலாம்?
உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்க கூடாது
உடலுறவுக்குப் பிறகு உடனே சிறுநீர் கழிப்பது யுடிஐ அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மட்டும் குறைக்காது. கூடவே சேர்ந்து அங்குள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.
ஆண்களின் விந்து இயற்கையில் காரணமானது. அது உங்கள் பெண்ணுறுப்பு பாதுகாப்பு நெறிமுறையை மாற்றக்கூடும்.அதனால் தான் உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்கவும், மெதுவாக சுத்தம் செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
அதிக சர்க்கரை சாப்பிட வேண்டாம்
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை எப்பொழுதுமே உங்க பெண்ணுறுப்பு ஆரோக்கியத்திற்கு எதிரியானது. ஏனெனில் அது ஈஸ்ட் தொற்று க்கு வழி வகுக்கும். ஒரு வேளை உங்களுக்கு நீரிழிவு நோயாக இருந்தால் கூடுதல் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
செயற்கை இழைகளால் ஆன உள்ளாடைகளை அணிவது
செயற்கை இழைகளால் ஆன உள்ளாடைகள் உங்களுக்கு ஒரு மென்மையான தன்மையை தரலாம். ஆனால் அவை போதுமான வியர்வையை ஊற வைக்காது. எனவே வியர்வை அந்த பகுதியில் பூஞ்சை தொற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இறுக்கமான உள்ளாடையை அணியும் யோசனையை கைவிடுங்கள். இயற்கை இழைகளால் ஆன பருத்தி உள்ளாடைகளை அணிவது உங்க வியர்வையை உறிஞ்ச உதவும்.
குறிப்பாக பெண்ணுறுப்பு பகுதி அதிகமாக வியர்த்தால் பெண்ணுறுப்பு பகுதியில் மருந்து அல்லது டால்கம் பொடியை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது தொற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
ஸ்டிராபெர்ரியும் பேக்கிங் சோடாவும் சேர்த்து தேய்ச்சா பல் பால் மாதிரி வெள்ளை ஆகிடுமாமே... உண்மையா?
சோப்பு
வாசனை சோப்புகள் மற்றும் ஸ்பேர்க்களை பயன்படுத்த வேண்டாம்
வாசனை சோப்புகள் அல்லது ஸ்ப்ரேக்களை பயன்படுத்துவது உங்க பெண்ணுறுப்பு பகுதியில் உள்ள pH அளவை மாற்றுகின்றன. இது கிளமிடியா போன்ற நோய்த்தொற்றுக்கு வழி வகுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறார்.
தவறான சுத்த பராமரிப்பு
பெண்ணுறுப்பு பகுதியை எப்பொழுது சுத்தம் செய்தாலும் முன்னால் இருந்து பின்னால் செல்ல வேண்டும். அதாவது பெண்ணுறுப்பு பகுதியில் இருந்து ஆசன வாய் வரை செல்ல வேண்டும். இதற்கு மாறாக செய்யும் போது உங்க ஆசன வாய் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை பெண்ணுறுப்பு பகுதியை நோக்கி தள்ளுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது பிறகு தொற்று நோய்க்கு வழி வகுக்கும்.
மாதவிடாயின்போது ரத்தப்போக்கு ரொம்ப கம்மியா இருக்கா? இந்த 5 விஷயம்தான் காரணம்...
நாப்கின்கள்
நாப்கின்கள் மற்றும் டம்பான்களை அடிக்கடி மாற்றுங்கள்.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் மற்றும் டம்பான்களை அடிக்கடி மாற்ற முற்படுங்கள். அப்படியே வைத்திருப்பது அந்த பகுதியில் அரிப்பு மற்றும் தொற்றுநோய்க்கு வழி வகுக்கும். மாதவிடாய் இரத்த போக்கு உங்களுக்கு அதிகமாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்யுங்கள். நாப்கின்களை ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒரு முறை அதை மாற்றுங்கள். இதுவே டம்பான்கள் என்றால் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள். மாதவிடாய் நாப்கின்கள் மற்றும் டம்பான்களை பயன்படுத்துவதற்கு முன்பு அது சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்த தவறுகள் மிகவும் பொதுவானவை. ஆனால் இங்கே சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அசெளகரியத்தை சந்தித்தால் உடனே நீங்களாகவே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தை எடுத்துக் கொள்ள கூடாது. எனவே அந்தரங்க பகுதியில் தொற்று இருப்பது உறுதியானால் உடனே ஒரு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இது தொற்றுநோய்களை ஆரம்பத்திலேயே விரட்ட பெண்களுக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.