ஆப்நகரம்

அறுசுவை உணவில் முதலில் எந்த சுவை உணவை சாப்பிட வேண்டும்?... ஏன்... தெரிஞ்சிக்கோங்க...

நம்முடைய பாரம்பரிய உணவு முறை என்பது அறுசுவைகளுடன் கூடிய உணவு முறை தான். இந்த ஆறு சுவைகளில் எது முக்கியமானது. எந்தெந்த சுவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அதில் நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதை இங்கே காண்போம்.

Samayam Tamil 4 Dec 2020, 4:13 pm
உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்று சேர்ந்து உடலின் இயக்கத்தை முறைப்படுத்துகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுப் பொருடகளினால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும். அதற்காக அறுசுவை உணவு தானே என்று எப்படி வேண்டுமானாலும் சாப்பிடக் கூடாது. அவற்றிற்கென சில முறைகள் உண்டு. அதன் அடிப்படையிலேயே சாப்பிட வேண்டும். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
Samayam Tamil traditinal eating order for meal in tamil
அறுசுவை உணவில் முதலில் எந்த சுவை உணவை சாப்பிட வேண்டும்?... ஏன்... தெரிஞ்சிக்கோங்க...


​சுவையின் தன்மையும் நன்மையும்

அறுசுவை உணவுகளில் ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனி தன்மையும் நன்மையும் இருக்கின்றது. அந்த தன்மைகளை அறிந்து கொண்டாலே போதும் நம்முடைய உணவை நாம் முறைப்படுத்தி சாப்பிட இயலும்.

இனிப்பு தசையை வளர்க்கும். உடல் பெருக்கச் செய்யும். துவர்ப்புச் சுவை ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

​துவர்ப்புச் சுவை

உடல் நலத்துக்கு மிகவும் இன்றியமையாதது. வியர்வை, ரத்தப் போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும் ஆற்றல் துவர்ப்புச் சுவைக்கு உண்டு. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்ற துவர்ப்பு சுவையுடைய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது நல்லது.

​இனிப்பு சுவை

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இனிப்புச் சுவை அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். அதிக அளவில் உடல் சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது. குறிப்பாக அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளில் இனிப்புச் சுவையும் இருக்கும்.

​புளிப்பு சுவை

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

​காரம் சுவை

காரம் நமக்குப் பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை. உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்கும் தன்மை இந்த கார சுவைக்கு உண்டு.

​கசப்பு சுவை:

பெரும்பாலும் அறுசுவைகளில் நமக்குப் பிடிக்காத சுவை இது. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இது தான். இது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகியவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து அதிக கசப்புச் சுவையைப் பெறலாம்.

​உவர்ப்பு சுவை

அனைவரும் விரும்புகின்ற சுவை. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்லுவதுண்டு. நம்முடைய உணவில் தவிர்க்க இயலாத பொருள் உப்பு. நமக்கு உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும் ஆற்றல் இந்த உவர்ப்புச் சுவைக்கு உண்டு. உண்ட உணவைச் ஜீரணிக்க வைப்பதில் மிக முக்கியப் பங்கு உவர்ப்புச் சுவைக்கு உண்டு. கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது. அதனால் வாரத்தில் இரண்டு முறையாவது இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்