ஆப்நகரம்

வேகன் டயட்ல இருக்கறவங்க மோர் குடிக்க முடியலயா? தினமும் ஒரு டம்ளர் இந்த தேங்காய் மோர் குடிங்க...

நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு சோர்வாக காணப்படுபவர்கள் இந்த தேங்காய் மோரை பருகி வரலாம். இந்த மாங்காய் தேங்காய் மோரில் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது உங்க உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதை எப்படி செய்யலாம் என அறிவோம்.

Samayam Tamil 3 Sep 2021, 10:37 am
காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சி உடன் செயல்படுவது அந்த நாள் வேலைகளை சிறப்பாக செய்ய உதவி செய்யும். எனவே காலை உணவு என்பது மிக முக்கியமான ஒன்று. உங்க உடலுக்கு தேவையான ஆற்றலை தரக் கூடியது காலை உணவு. அதேபோல தான் இரவில் உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருந்தால் தான் நல்ல தூக்கமும் அடுத்த நாள் எழுந்திருக்கும் போது புது்துணர்வுடனும் இருக்க முடியும். அந்த வகையில் பார்க்கும் போது நீங்கள் முழுவதும் புத்துணர்ச்சி உடன் செயல்பட மோர் உதவுகிறது.
Samayam Tamil try this mango and coconut buttermilk for refreshing your day recipe added
வேகன் டயட்ல இருக்கறவங்க மோர் குடிக்க முடியலயா? தினமும் ஒரு டம்ளர் இந்த தேங்காய் மோர் குடிங்க...


​புத்துணர்ச்சி தரும் மோர்

இந்திய மக்களை பொருத்தவரை மோர் என்பது ஒரு சிறந்த பானமாகும். இந்த மோரை மக்கள் கோடை காலங்களில் தாகத்தை தணிக்க பயன்படுத்துகின்றனர். உண்மையில் மோர் ஆனது உங்க தாகத்தை மட்டும் தணிப்பதில்லை. கூடவே இணைந்து உங்க உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்கவும் உதவி செய்கிறது. இதுவரை மோரானது மாட்டுப் பால் கொண்டு தயாரித்து இருப்போம். ஆனால் இதில் மாட்டுப்பாலுக்கு பதிலாக தேங்காய் பால் பயன்படுத்துவது இன்னும் கூடுதல் சுவையளிக்கும். இரவில் இதை பாலுக்கு பதிலாக குடித்துவிட்டு தூங்கச் செல்லலாம். அடுத்த நாள் காலை வழக்கத்தைவிட அதிக புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

சரி வாங்க இந்த சைவ மோரை எப்படி வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம் இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என அறிவோம்.

​சைவ தேங்காய்ப்பால் மோர் தயாரிப்பது எப்படி :

தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும் இந்த சைவ மோரில் கறிவேப்பிலை, மிளகாய், இஞ்சி மற்றும் ஏலக்காய் போன்றவற்றை சேர்ப்பது மிகுந்த ஆரோக்கியத்தை தரக் கூடியது.

தேவையான பொருட்கள் :

  • கறிவேப்பிலை
  • பச்சை மிளகாய்
  • ஏலக்காய்
  • இஞ்சி
  • துருவிய தேங்காய் /தேங்காய் பால்
  • மாங்காய்

101 கிலோல இருந்து 71 கிலோவாக எடையைக் குறைத்த சிம்பு... படத்துக்கா மட்டுமில்ல... அப்போ எதற்கா இப்படி செய்தார்

​தயாரிக்கும் முறை :

கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஏலக்காய், இஞ்சி, மாங்காய் மற்றும் துருவிய தேங்காய் என எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதை மிக்ஸி சாரில் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை ஒரு வடிகட்டும் துணியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளுங்கள்.

நன்றாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சுவையான புத்துணர்ச்சி ஊட்டும் மாங்காய் தேங்காய் மோர் தயாராகி விட்டது.

எடையை குறைக்க தினமும் குடிக்க வேண்டிய பானங்கள் என்னென்ன... என்னென்ன குடிக்கக் கூடாது...

பயன்கள்:

இந்த மாங்காய் தேங்காய் மோரில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன. எனவே உங்க நாளை புத்துணர்ச்சி ஊட்ட இது ஒரு சிறந்த காலை பானமாகும். இதை காலையில் குடித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி உடன் வேலை செய்வீர்கள்.

javascript-Instagram

View this post on Instagram A post shared by Neelam Mangat (@adika.yoga)

அடுத்த செய்தி

டிரெண்டிங்