விரல் நுனிகளில் வீக்கம்
சில வகை நுரையிரல் புற்றுநோய் கட்டிகள் உடலில் சில ரசாயனங்களையும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்யும். இதனால் ரத்தமும் உடலில் நீர்மங்களும் உந்தித் தள்ளப்படும்போது அது விரல் நகங்களை நோக்கி நகர ஆரம்பிக்கின்றன.
இதனால் விரல்களின் நுனிப்பகுதி மட்டும் வீங்கியது போலவும் மிகவும் பளபளப்பான தோற்றத்துடனும் காணப்படும்.
முதுகு மற்றும் தோள்பட்டை வலி
பான்கோஸ்ட் கட்டிகள் என்று அழைக்கப்படும் ஒருவகை புற்றுநோய் கட்டிகள் நுரையீரல் புற்றுநோய் வகைகளில் ஒன்று. இந்த வகை புற்றுநோய் கட்டிகள் நுரையீரலின் மேல்பகுதியில் வளர ஆரம்பிக்கும்.
இதனால் நரம்புகள், தோள்பட்டை, மார்புப் பகுதி எலும்புக்கூடு, முதுகு வலி, முதுகுத் தண்டுவடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி மிகக் கடுமையான வலியை உண்டாக்கும். இதுவும் நுரையீரல் புற்றுநோயின் முக்கியமான அறிகுறிதான் என்பதை மறக்காதீர்கள்.
ஆண்களுக்கு ஏற்படும் மார்பக வீக்கம்
சில ஆண்களுக்கு பெண்களின் மார்பகம் போல மார்புப் பகுதி வீக்கமாக இருக்கும். இந்த பிரச்சினையை கைனகோமாஸ்டியா என்று பெயர். இது சில ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிற பிரச்சினை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது நுரையீரல் புற்றுநோயின் முக்கியமான அறிகுறி என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
புற்றுநோய் செல்கள் ஆண்களின் ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி மார்பகத் திசுக்களில் வீக்கங்களை ஏற்படுத்தும்.
காலை எழும்போது முகம், கழுத்து வீக்கம்
காலையில தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகம், கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகள் வீங்கியிருக்கும். இது சிறுநீரக புற்றுநோயின் மிக முக்கிய அறிகுறியாகும்.
நுரையீரலில் இருந்து மேல்நோக்கி ரத்தம் செல்லும் போது அது அங்கேயே நின்று கொண்டு உடலின் கீழ்ப்பகுதிக்குரத்த ஓட்டம் செல்லாமல் தடைபடும். இதனால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அதிக நீர்மங்கள் சேர்ந்து முக வீக்கத்தையும் சிவந்த நிறத்தையும் கொடுக்கும்.
அதிக சோர்வு மற்றும் உடல் வலி
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது புற்றுநோய் செல்கள் ரத்தத்தின் வழியே எலும்புகள் வரையிலும் பரவ ஆரம்பிக்கும். புதிய புற்றுநோய் கட்டிகளை உற்பத்தி செய்யத் தொடங்கும். இதனால் நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பலருக்கும் எலும்புகளும் பலவீனமாக இருக்கும்.
எலும்புகள் பாதிப்படைவதால் அதிக அளவிலான உடல் சோர்வும் கடுமையான உடல் வலியும் உண்டாகும். இதுபோன்ற அறிகுறிகளை வெறும் ஊட்டச்சத்து பற்றாக்குறை என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். இது நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகளில் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.
ரத்தம் உறைதலும் நுரையீரல் புற்றுநோயும்
கால்கள் மற்றும் தோள்பட்டை பகுதிகளில் அடிக்கடி ரத்தம் உறைதல் பிரச்சினை உண்டாகும். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் இந்த பிரச்சினை இருக்கும்.
நுரையீரலுக்குச் செல்லும் நரம்புகளில் ஏற்படுகின்ற வீக்கத்தின் காரணமாக இதுபோன்ற ரத்தம் உறைதல் பிரச்சினை உண்டாகும். நுரையீரல் புற்றுநோய் இருக்கும்போது அதனால் ஏற்படும் தொற்றுக்கள் ரத்தம் உறைதலை தூண்டுகின்றன. இதுவும் நுரையீரல் புற்றுநோயின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும்.