ஆப்நகரம்

மருத்துவமனைக்கு செல்போன் கொண்டு சென்றால் ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அல்லது நோயாளிகள் இருக்கும் இடங்களுக்கு செல்போன்களை கொண்டு சென்றால், ஆப்பத்தை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

TNN 6 Jan 2017, 6:03 pm
ஐதராபாத் : மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அல்லது நோயாளிகள் இருக்கும் இடங்களுக்கு செல்போன்களை கொண்டு சென்றால், ஆப்பத்தை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil visiting a hospital your phone can spread dangerous infections
மருத்துவமனைக்கு செல்போன் கொண்டு சென்றால் ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை


மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் அவருடன் கூட வருபவர்கள் நோயாளிகள் இருக்கும் அறைகள் மற்றும் ஐசியு பகுதியில் மொபைல் போன்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மொபைல் போன்கள் பாக்டீரியா, வைரஸ்களை பரப்பும் பெரிய காரணியாக உள்ளது.

இது தொடர்பாக நடைப்பெற்ற ஆய்வில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் மொபைல் கீப்பேடில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்களின் குழுக்களை கண்டுபிடித்துள்ளனர். இவைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆண்டிபயாட்டிக் மருந்து மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதோடு மொபைல் டிவைஸ்களில் உள்ள கிருமிகள், நோய் கிருமிகளுடன் இணைந்து அவற்றை அதிகரிக்கச் செய்கின்றன.

எனவே டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சிகிச்சைக்கு பின் நன்றாக கைகளை சுத்தம் செய்வது அவசியம். அதோடு நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் நபர்களும் மொபைல் போனை பயன்படுத்தாமல் இருப்பது தான் சிறந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்