ஆப்நகரம்

கண்களில் இப்படி அழற்சி வருவது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா? உடனே என்ன செய்யணும்

கண்கள் நம் உடலில் உள்ள சென்சிடிவ்வான உறுப்புகளில் ஒன்று. இந்த கண்களில் பல்வேறு விதமாக பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அவற்றில் நாம் பெரிதாக கவனிக்காத ஒரு விஷயம் தான் இந்த கண் அழற்சி நோய். அது குறித்து அந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Samayam Tamil 27 May 2020, 3:44 pm
பொதுவாக நாம் அனைவருக்கும் கண்களில் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏன்னென்றால் மூக்கு வழியாக வாய் வழியாக கை,கால்கள் வழியாக அலர்ஜி ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உறை அணிந்து கொள்ளலாம் ஆனால் கண்கள் அப்படி அல்ல நம் கண்களை வைத்து தான் அன்றாட வாழ்க்கை முறை வாழ்கிறோம். தூசி,அழுக்கு போன்றவற்றால் கண்களுக்கு அலர்ஜி ஏற்படும் அதனை தவிர்ப்பதற்கும் வந்தால் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்
Samayam Tamil what is allergic conjunctivitis know the symptoms and treatments
கண்களில் இப்படி அழற்சி வருவது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா? உடனே என்ன செய்யணும்


​அது எதனால் ஏற்படுகிறது


இமைப்படல அழற்சி என்பது கண்களின் மேற்பரப்பில் ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது. உங்கள் கண்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் ஒரு பொதுவான நிலை இது ஆகும். மகரந்தம் மற்றும் புகை ஆகியவை ஒவ்வாமைக்கான எடுத்துக்காட்டு ஆகும்.

​கண் ஒவ்வாமைக்கான தடுப்புகள் என்னன்ன

பெரும்பாலும் கண் அழற்சியை தடுப்பதற்கு வழி இல்லை.ஆனால் அதிக தூசி இருக்கும் இடத்திற்கு செல்வது,காற்று அதிகம் வீசும் போது வெளியில் செல்வது,போன்றவற்றை தவிர்த்துக் கொள்வது நல்லது. அழுக்கு மற்றும் தூசி அதிகம் உள்ள இடங்களில் காற்றாடியை பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

​இமைப்படல அழற்சிக்கான காரணங்கள் என்ன

ஒவ்வாமையானது காற்றில்,அதாவது தூசி, விலங்குகளின் முடி, புகை அல்லது தாவர மகரந்தம் போன்றவற்றிலும் இருக்கக் கூடும். உங்கள் கண்கள் மீண்டும் மீண்டும் ஒவ்வாமைக்கு ஆளாகும்போது, உடல் வினைபுரிந்து ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. காற்றில் உள்ள ஒவ்வாமைகள் கண்ணில் உள்ள ஆன்டிபாடிகளை தொடர்பு கொள்ளும்போது, ஒரு ஒவ்வாமை எதிர்வினை தொடங்குகிறது. கண் ஹிஸ்டமைன் உள்ளிட்ட ரசாயனங்களை வெளியிடுகிறது. இந்த இரசாயனங்கள் ஒவ்வாமை வெண்படலத்தின் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றது.

​அறிகுறிகள் என்ன

கண்களில் நமைச்சல், நீர் மற்றும் கண்கள் சிவப்பு நிறமாக மாறக்கூடும். சில நேரங்களில் கண்கள் வீங்கியிருக்கலாம். சில மருந்துகளை ஒவ்வாமைகளை ஏற்படத்தக் கூடியவை.ஆகையால் ஒரு கண்ணில் அழற்சி ஏற்பட்டிருந்தாலும் இரு கண்களையும் பாதிக்கும்.

​சிகிச்சை என்ன

சிகிச்சையின் முதல் தேர்வு ஒவ்வாமைக்கான காரணத்தை அறிந்து அதனை தவிர்ப்பது. சிலர் ஆண்டிஹிஸ்டமைன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுவார்கள். குறிப்பாக உங்களுக்கு மற்ற ஒவ்வாமை அறிகுறிகள் இருந்தால்,கண்களுக்கான ஒவ்வாமைக்கு கண் சொட்டு மருந்தை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த கண் சொட்டுகள் அழற்சி எதிர்ப்பு, டிகோங்கஸ்டன்ட் மற்றும் எதிர்ப்பு ஹிஸ்டமைன் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த கண் சொட்டு மருந்தில் அழற்சி எதிர்ப்பு, டிகோங்கஸ்டன்ட் மற்றும் எதிர்ப்பு ஹிஸ்டமைன் பண்புகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், கடுமையாக கண் ஒவ்வாமை இருந்தால், மருத்துவ மேற்பார்வையின் கீழ் குறுகிய காலத்திற்கு ஸ்டீராய்டு மருந்துக்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படும். சோடியம் குரோமோகிளைகேட் என்னும் கண் சொட்டு மருந்து கண் ஒவ்வாமை தடுப்பிற்கு சிறந்ததாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்