ஆப்நகரம்

பாதாமை ஊறவைத்து தோலுரித்து தான் சாப்பிட வேண்டும்... ஏனென்று தெரியுமா?

பாதாம் ஒரு முக்கியமான விதை உணவு ஆகும். இது நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இரவில் ஊறவைக்கும் பாதாம் அதிகமான நன்மைகளை அளிப்பதாக பலர் கூறுகின்றனர். எனவே இரவில் பாதாமை ஊற வைப்பதால் நாம் என்னென்ன நன்மைகளை எல்லாம் பெற முடியும் என்பதையும் பாதாமில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் இப்போது விரிவாக பார்க்கலாம்.

Samayam Tamil 30 Sep 2021, 10:26 am
நமது வீடுகளில் பாட்டிகள், பாதாமை உண்பதற்கு முன்பாக ஊற வைத்து உண்ணுமாறு கூறி இருப்பார்கள். அந்த ஆலோசனையை எத்தனை பேர் பின்பற்றி இருப்போம் என தெரியவில்லை. ஆனால் இது ஒரு ஆரோக்கியமான விஷயமாகும். சாதரணமாகவே பாதாம் பல சத்துக்களை கொண்ட ஒரு விதையாகும். இதை இரவில் ஊற வைப்பது மூலம் இன்னும் அதிக நன்மை பயக்கும் விதையாக அதை மாற்ற முடியும்.பாதாமை ஏன் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த பாதாம் நமக்கு என்ன மாதிரியான நன்மைகளை செய்கிறது என்பதை இப்போது விரிவாக பார்க்கலாம்.
Samayam Tamil why should soaked and peeled of almonds before eating
பாதாமை ஊறவைத்து தோலுரித்து தான் சாப்பிட வேண்டும்... ஏனென்று தெரியுமா?


​பாதாமில் உள்ள சத்துக்கள்

பாதாமில் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் இன்னும் பல சத்துக்கள் உள்ளன. எடை இழப்பு, நல்ல எலும்பு ஆரோக்கியம், மனநிலையை மேம்படுத்துதல், இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைத்தல் மற்றும் புற்றுநோய் பிரச்சனை, நீரிழிவு பிரச்சனை என உடலில் ஏற்படும் பல்வேறு நோய் பிரச்சனைகளை சரி செய்ய இது உதவுகிறது.

​ஆய்வுகள்

இப்படி பல நன்மைகளை கொண்டுள்ளதால் சுகாதார ஆய்வுகளும் கூடதினசரி வழக்கமாக பாதாம் எடுத்துக்கொள்வது பல நன்மைகளை அளிப்பதாக கூறுகின்றன. பாதாம் பற்றிய ஒரு ஆய்வில், அதிக அளவில் பாதாம், வேர்க்கடலை மற்றும் அக்ரூட் பருப்புகள் உண்ணும் பெண்கள் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைவாக பெற்றுள்ளனர் என கூறப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன...

​ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்தவை

மற்றொரு ஆய்வில் பாதாம் ஆண்டி ஆக்ஸிடண்ட்களின் அளவை கணிசமான அளவில் அதிகரித்தது கண்டறியப்பட்டது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு பாதாம் பல நன்மைகளை செய்கிறது, ஏனெனில் இதில் உள்ள மெக்னீசியம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

நார்ச்சத்து உணவுகள் அதிகம் கொண்ட உணவுகளை தினமும் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்...

​ஊறவைப்பது

பாதாம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது என்பதை உங்களால் இப்போது அறிந்திருக்க முடியும். பாதாமின் தோலில் ஒருவகை நச்சுத் தன்மை இருக்கும். அது உள்ளு விதையுடன் சேர்ந்தே இருக்கும். அந்த நச்சுத் தன்மையை நீக்கதான் நன்கு ஊறவைத்து பின் தோலுரித்து சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதேபோல தான் இஞ்சியின் தோலும். அதனால் தான் இஞ்சியின் தோலை நாம் நீக்குகிறோம். எனவே இனி உங்கள் உணவில் பாதாமை சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம். பாதாமை சேர்த்துக் கொள்வதற்கு முன்பாக அதை முதல் நாள் இரவில் ஊறவைக்க மறக்க வேண்டாம். ஊறவைத்த பாதாமை உண்பது மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்