ஆப்நகரம்

அதிக ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்கள் எதிர்கொள்ளும் மோசமான பிரச்னைகள்!

அதிக ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்கள் எதிர்கொள்ளும் மோசமான பிரச்னைகள்!

TOI Contributor 7 Feb 2017, 8:51 pm
பத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil why women with more than 10 sexual partners can become infertile
அதிக ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்கள் எதிர்கொள்ளும் மோசமான பிரச்னைகள்!


செக்ஸ் என்பது எல்லோர் வாழ்விலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதுவும் இன்றைய உலகில் பல பேருடன் செக்ஸ் வைத்துக்கொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது. அப்படி பல பேரிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூட சொல்லப்பட்டு வந்தது. ஆனால் பல பேருடன் செக்ஸ் வைத்துக்கொள்வதால் பெண்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது 10க்கும் மேற்பட்ட ஆண்களளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

அதே போன்று 10 ஆண்களிடம் மூன்று முறைக்கு மேல் செக்ஸ் வைத்துக்கொண்ட பெண்களுக்கு வயிற்று வலி அதிகம் ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பு உடலுறவினால் தொற்றும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. மிக இள வயதில் செக்ஸ் வைத்துக்கொள்ள தொடங்கிய பெண்களுக்கு இம்மாதிரியான நோய் ஏற்பட அதிக வாயப்புள்ளது. காய்ச்சல், சிறு நீர் கழிக்கும் போது வலி ஆகியவையும் ஏற்படுகின்றன. அதனால் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்